Welcome To Art Bookshelf
India’s greats classic culture art, poetry, literature and music.!
Tamil Art Books Online Free Reading

கலைகள்

கல், கண்ணாடி, துணி, காகிதம், பைஞ்சுதம் போன்றவற்றில் வண்ணப்பூச்சுகளைப் பயன்படுத்தி வரையப்படும் அழகியல் சார்ந்த செயற்பாடு ஓவியக்கலை ஆகும். வரைபவரின் கருத்தியல், நோக்கம் போன்றவற்றை வெளிப்படுத்தும் வண்ணங்கள், அச்சுகளால் வெளிப்படுத்தும் கலை ஆகும். உடல் ஓவியம், கேலிச் சித்திரம், காபி ஓவியம், துணி ஓவியம், கண்ணாடி ஓவியம், குகை ஓவியம், போன்றவை ஓவியக்கலையின் பல்வேறு வடிவங்களாகும்.

கல், கண்ணாடி, உலோகம் முதலியவற்றால் செதுக்கியோ, வார்த்தோ செய்யப்படும் முப்பரிமாண கலைப்பொருள் சிற்பம் ஆகும். தனிச் சிற்பம், புடைப்புச் சிற்பம், செதுக்குச் சிற்பம், இயங்கியல் சிற்பம், அடுக்கற்கலைச் சிற்பம் போன்றவை சிற்பங்களின் வகைகளாகும். உரோமானிய, கிரேக்க, எகிப்திய, இந்தியக் கலைச்சிற்பங்கள் உலகப்பிரசித்தி பெற்றன. பெரும்பாலான சிற்பங்கள் கடவுள், மதம், இனத்தலைவர்கள், மற்றும் பண்பாடு சார்ந்த கதைமாந்தர்களின் உருவங்களை உருவகிக்கின்றன.

ஒளிப்படம், நிழற்படம் (அ) புகைப்படமானது, ஒளி எதிரொளிப்பின் மூலம் பொருட்கள் தாம் வெளிவிடுகின்ற (அ) அதன் மீது தெளித்து வெளிவருகின்ற ஒளியினால் ஓர் ஒளியுணர் மேற்பரப்பில் அதன் பிம்பத்தைப் பதிவிட்ட படத்தைக் குறிக்கும். அழகுற எடுக்கப்படும் அச்சுப்பிரதி (அ) ஒளிப்படம் பல்வேறு கலை வேலைப்பாடுகளுடன் நிகழ்வை வரலாற்றில் பதிவிக்கின்றன.இது பொதுவாக ஒளிப்பட முறை, எண்மிய ஒளிப்பட முறை என இருவகைப்படும். இவற்றின் நிறம் மற்றும் தரத்தின் அடிப்படையிலும் ஒளிப்படங்கள் வேறுபடும்.

ஒழுங்கு செய்யப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட ஒலிகளால் ஒருங்கிணைக்கப்படும் கூறு இசை ஆகும். ஒலி அளவு, இசைக் கருவிகளின் ஒலிப்பினம், அதிர்வுகள் போன்றவை இசையை மென்மையாக்கும் காரணிகளாகும். மேற்கத்திய, இந்திய, சீன இசைகள் தங்களின் பண்பாடடுடன் ஒன்றியமைந்தாகும்.

தாளத்துக்கும், இசைக்கும் ஒத்தசைவாக உடலை நகர்த்தும் கலை வடிவம் நடனம். சமூகம், பண்பாடு, சமயம் சார்ந்தோ, சார்பற்ற மகிழ்ச்சிக்காகவோ நிகழ்த்திக்காட்டும் நிகழ்கலையாகவோ கொள்ளப்படும். சில விலங்கினங்களில் இனப்பெருக்கத்திற்காக துணையைக் கவரும் விதமாக அவைகளால் நிகழ்த்தப்படுகிறது.

இந்திய (பரத நாட்டியம், ஒடிசி, கதகளி, குச்சிபிடி, கதக்), மேற்கத்திய உள்ளிட்ட நடனக்கலைகள் நடனத்தில் பண்டைய இலக்கியக் கதைகள், வரலாறு, சமூக நிகழ்வுகள், காதல் போன்றவற்றை நடன அசைவுகளின் மூலம் உணர்த்தும் விதமாக அமைக்கப்பெற்றிருக்கும்.

கரகாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், சிலம்பாட்டம், முதலியன தமிழகத்தின் கிராமப்புறங்களில் பல்வேறு காலகட்டங்களில் வளர்த்தெடுக்கப்பட்ட நாட்டுப்புறம் சார்ந்த நடன வகைகளாகும்.

மையக்கருவான கதையுடன், நடிப்பு, ஒப்பனை, ஓவியம், திரை, மற்றும் ஒலி, ஒளி, உடன் ஒருங்கமைக்கப்பட்ட அரங்கமைப்பு, ஆகிய இயலும், இசையும் சேர்த்து ஒன்றிணைப்பால் படைக்கப்படுவது நாடகம் ஆகும்.

உரைநடை இலக்கியப் புனைவு மொழிபு (அ) கதை ஆகும். ஒரு மையக்கருவைக் கொண்டு அதனை ஒட்டிய சம்பவங்கள், நிலைப்பாடுகளுடன் தொடர்புபடுத்தி புனையப்படுவது கதை. திரைப்படங்களில் அதன் காட்சிப்படுத்தலுக்கேற்ப திரைக்கதைகளாக வடிவம் பெறுகின்றன.

கதைகள் பெரும்பாலும் இயல்பான நிகழ்வை மிகைப்படுத்தி கற்பனைத்திறனை மிகுவித்து உரைப்பதாகும். கதை, சிறுகதை, தொடர்கதை, படக்கதை என அதன் தன்மை, வடிவங்களைக் கொண்டு வகைப்படுத்தப்படும்.

ஓசை சந்தத்துடன் கூடிய, ஒத்திசை பண்புச் சொற்களால் உணர்ச்சி, கற்பனை, கருத்துக்களை வெளிப்படுத்த உதவும் இலக்கிய வடிவம் கவிதை ஆகும். கவிதைப்படைப்புகள் அதன் நோக்கம் கொண்டு இருந்ததைப் படைத்தல், இருப்பதைப்படைத்தல், இருக்க வேண்டியதைப் படைத்தல் என மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. கவிதை பண்டைய வழக்கில் பண், விருத்தம், நூற்பா என்றும் மேலும் நவீனத்துவத்தினால் புதுக்கவிதை, ஐக்கூ, எனவும், பலவகையான வடிவங்களைக் கொண்டுள்ளது.

பண்டைய இலக்கியங்கள் யாவும் செய்யுள் மற்றும் பாட்டு நடையிலேயே இருந்தன. பிந்நாளில் அனைவரும் ஆய்ந்தறியும் வண்ணம் உரைநடையில் (அ) செம்மையான மொழி நடையில் உரைகள் கட்டமைக்கப்பட்டன. இவை எளிய மொழிநடையில் பல்வேறு தலைப்புகளைக் கொண்டும் அறிக்கைகளாக உரைப்படுத்தப்படுகின்றன. ஒரு பொருள்பற்றி சிந்தித்துச் சிந்தித்தவற்றை ஒழுங்குபடுத்தி எழுதுவதே (அ) விவாதித்து விபரிப்பதே கட்டுரை ஆகும்.

தமிழர் கலைகள்

சிற்பக்கலை

கட்டிடக்கலை

கப்பற்கலை

மட்பாண்டக்கலை

மரவேலைக்கலை

ஓவியம்

ஒளிப்படம்

இசை

நடனம்

நாடகம்

கதை

கவிதை

கட்டுரை

India’s greats classic culture art, poetry, literature and music

INDIAN CULTURE

People flock to museums like never before, so they must have their motives. But when it comes to art, people get strangely afraid to ask too directly what it all might be for, because everyone except you might know the answer already. It’s perhaps too obvious; it’s perhaps too complicated; the result is an awkward silence.

What is described as the culture of India is often more correctly viewed as the culture of northern India. Much of India’s greats classic culture—art, poetry, literature and music—has its roots in or was strongly influence by Persian culture. Nationwide, there are traditions of folk music, religious music and music associated with theater, radio and film. In addition, India's ethnic groups, each have their own entertainment, religious and folklore traditions. In the past music, dance and theater were often associated with prostitution and entertainers traditionally belonged to lower castes. Many traditionalists in India find Western music and culture offensive.

It has long been argued that the goal of art and culture in India is tap into something universal and spiritual. On the Indian concept of aesthetics, the Kashmiri philosopher Abhinavagupta wrote n the 10th century: “Artistic creation is the direct or unconventionalized expression of a feeling of passion ‘generalized,’ that is, freed from distinction in time or space and therefore from individual relationships and practical interests, through an inner force of the artistic core creative intuition within the artist. This state of consciousness (irasa) embodied in the poem is transferred to the actor, the dance, the reciter and to the spectator.

South Asia “has been the seat of great civilizations from time immemorial. From the Himalayan mountains to the vast island chains of the equator, from the Indian subcontinent to the Pacific, the peoples of this region have produced magnificent art for thousands of years. Included are examples of Buddhist and Hindu sculpture in stone and bronze, later Indian court art, miniature painting, and elegant personal possessions. These artworks demonstrate that the people who created and owned them keenly appreciated the things of this world—the luxury and fine craftsmanship that power can command—and at the same time probed deeply into spiritual and cosmic matters of great complexity. South Asia encompasses the modern nations of India, Bangladesh, Pakistan, and Sri Lanka. The subcontinent was the source of a great civilization which spread to Afghanistan in the northwest, to the Himalayan region (modern Nepal, Bhutan, and Tibet) in the northeast, and eastward to Southeast Asia.

Culture plays an important role in the development of any nation. It represents a set of shared attitudes, values, goals and practices. Culture and creativity manifest themselves in almost all economic, social and other activities. A country as diverse as India is symbolized by the plurality of its culture. India has one of the world’s largest collections of songs, music, dance, theatre, folk traditions, performing arts, rites and rituals, paintings and writings that are known, as the ‘Intangible Cultural Heritage’ (ICH) of humanity. In order to preserve these elements, the Ministry of Culture implements a number of schemes and programmes aimed at providing financial support to individuals, groups and cultural organizations engaged in performing, visual and literary arts etc.

ஆய கலைகள் பழந்தமிழ் இலக்கியங்களில் கற்க வேண்டிய கலைகளாக பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இலக்கம்
கலை
தமிழ் விளக்கம்
  1. 1.
    அக்கர இலக்கணம்
    எழுத்திலக்கணம்
  2. 2.
    லிகிதம் (இலிகிதம்)
    எழுத்தாற்றல்
  3. 3.
    கணிதம்
    கணிதவியல்
  4. 4.
    வேதம்
    மறை நூல்
  5. 5.
    புராணம்
    தொன்மம்
  6. 6.
    வியாகரணம்
    இலக்கணவியல்
  7. 7.
    நீதி நூல்
    நய நூல்
  8. 8.
    சோதிடம்
    கணியக் கலை
  9. 9.
    தரும சாத்திரம்
    அறத்து பால்
  10. 10.
    யோகம்
    ஓகக் கலை
  11. 11.
    மந்திரம்
    மந்திரக் கலை
  12. 12.
    சகுனம்
    நிமித்தக் கலை
  13. 13.
    சிற்பம்
    கம்மியக் கலை
  14. 14.
    வைத்தியம்
    மருத்துவக் கலை
  15. 15.
    உருவ சாத்திரம்
    உருப்பமைவு
  16. 16.
    இதிகாசம்
    மறவனப்பு
  17. 17.
    காவியம்
    வனப்பு
  18. 18.
    அலங்காரம்
    அணி இயல்
  19. 19.
    மதுர பாடனம்
    இனிது மொழிதல்
  20. 20.
    நாடகம்
    நாடகக் கலை
  21. 21.
    நிருத்தம்
    ஆடற் கலை
  22. 22.
    சத்த பிரமம்
    ஒலிநுட்ப அறிவு
  23. 23.
    வீணை
    யாழ் இயல்
  24. 24.
    வேனு
    குழலிசை
  25. 25.
    மிருதங்கம்
    மத்தள நூல்
  26. 26.
    தாளம்
    தாள இயல்
  27. 27.
    அகத்திர பரீட்சை
    வில்லாற்றல்
  28. 28.
    கனக பரீட்சை
    பொன் நோட்டம்
  29. 29.
    இரத பரீட்சை
    தேர் பயிற்சி
  30. 30.
    கச பரீட்சை
    யானையேற்றம்
  31. 31.
    அசுவ பரீட்சை
    குதிரையேற்றம்
  32. 32.
    இரத்தின பரீட்சை
    மணி நோட்டம்
  33. 33.
    பூ பரீட்சை
    மண்ணியல்
  34. 34.
    சங்கிராம இலக்கணம்
    போர்ப் பயிற்சி
  35. 35.
    மல்யுத்தம்
    கைகலப்பு
  36. 36.
    ஆகர்சணம்
    கவிர்ச்சியல்
  37. 37.
    உச்சாடணம்
    ஓட்டுகை
  38. 38.
    வித்து வேஷணம்
    நட்பு பிரிக்கை
  39. 39.
    மதன சாத்திரம்
    மயக்குக் கலை
  40. 40.
    மோகனம்
    புணருங் கலை (காம சாத்திரம்)
  41. 41.
    வசீகரணம்
    வசியக் கலை
  42. 42.
    இரசவாதம்
    இதளியக் கலை
  43. 43.
    காந்தர்வ விவாதம்
    இன்னிசைப் பயிற்சி
  44. 44.
    பைபீல வாதம்
    பிறவுயிர் மொழி
  45. 45.
    தாது வாதம்
    நாடிப் பயிற்சி
  46. 46.
    கெளுத்துக வாதம்
    மகிழுறுத்தம்
  47. 47.
    காருடம்
    கலுழம்
  48. 48.
    நட்டம்
    இழப்பறிகை
  49. 49.
    முட்டி
    மறைத்ததையறிதல்
  50. 50.
    ஆகாய பிரவேசம்
    வான்புகுதல்
  51. 51.
    ஆகாய கமனம்
    வான் செல்கை
  52. 52.
    பரகாயப் பிரவேசம்
    கூடுவிட்டு கூடுபாய்தல்
  53. 53.
    அதிரிச்யம்
    தன்னுறு கரத்தல்
  54. 54.
    இந்திர சாலம்
    மாயம்
  55. 55.
    மகேந்திர சாலம்
    பெருமாயம்
  56. 56.
    அக்னி தம்பம்
    அழற் கட்டு
  57. 57.
    சல தம்பம்
    நீர்க் கட்டு
  58. 58.
    வாயு தம்பம்
    வளிக் கட்டு
  59. 59.
    திட்டி தம்பம்
    கண் கட்டு
  60. 60.
    வாக்கு தம்பம்
    நாவுக் கட்டு
  61. 61.
    சுக்கில தம்பம்
    விந்துக் கட்டு
  62. 62.
    கன்ன தம்பம்
    புதையற் கட்டு
  63. 63.
    கட்க தம்பம்
    வாட் கட்டு
  64. 64.
    அவத்தை பிரயோகம்
    சூனியம்

வேறொரு பட்டியல்

1. பாட்டு (கீதம்);

2. இன்னியம் (வாத்தியம்);

3. நடம் (நிருத்தம்);

4. ஓவியம்;

5. இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை;

6. பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்;

7. பூவமளியமைக்கை;

8. ஆடையுடை பற்களுக்கு வண்ணமமைக்கை;

9. பள்ளியறையிலும் குடிப்பறையிலும் மணி பதிக்கை;

10. படுக்கையமைக்கை;

11. நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்);

12. நீர்வாரி யடிக்கை;

13. உள்வரி (வேடங்கொள்கை);

14. மாலைதொடுக்கை;

15. மாலை முதலியன் அணிகை;

16. ஆடையணிகளாற் சுவடிக்கை;

17. சங்கு முதலியவற்றாற் காதணியமக்கை;

18. விரை கூட்டுகை;

19. அணிகலன் புனைகை;

20. மாயச்செய்கை (இந்திரசாலம்);

21. குசுமாரரின் காமநூல் நெறி (கௌசுமாரம்);

22.கைவிரைவு (ஹஸ்தலாவகம்);

23. மடைநூலறிவு (பாகசாத்திர வுணர்ச்சி);

24. தையல்வேலை;

25. நூல்கொண்டு காட்டும் வேடிக்கை;

26. வீணை யுடுக்கைப் பயிற்சி (வீணை டமருகப் பயிற்சி);

27. விடுகதை (பிரேளிகை);

28. ஈற்றெழுத்துப் பாப் பாடுகை;

29. நெருட்டுச் சொற்றொடரமக்கை;

30. சுவைத்தோன்றப் பண்ணுடன் வசிக்கை;

31. நாடகம் உரைநடை (வசனம்) யிவற்றினுணர்ச்சி;

32. குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்);

33. பிரம்பு முத்தலியவற்றாற் கட்டில் பின்னுதல்;

34. கதிரில் நூல் சுற்றுகை;

35. மரவேலை;

36. மனைநூல் (வாஸ்து வித்தை);

37. காசு, மணி நோட்டம் (நாணய ரத்னங்களின் பரிசோதனை);

38. நாடிப்பயிற்சி (தாதுவாதம்);

39. மணிக்கு நிறமமைக்கையும் மணியின் பிறப்பிட மறிகையும்;

40. தோட்டவேலை;

41. தகர்ப்போர் சேவற்போர் முதலிய விலங்கு பறவைப்போர்;

42. கிளி நாகணங்கட்குப் பேச்சுப் பயிற்றுவகை;

43. உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்;

44. குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை);

45. மருமமொழி (ரகசிய பாஷை);

46. நாட்டுமொழி யறிவு (தெசபாஷை யுணர்ச்சி);

47. பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை;

48. முற்குறி (நிமித்தம்) அமைக்கை;

49. பொறியமைக்கை;

50. ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்);

51. இருகாலிற் கொள்கை (துவிசந்தக்கிராகித்வம்);

52. பிதிர்ப்பா (கவி) விடுக்கை;

53. வனப்பு (காவியம்) இயற்றுகை;

54. உரிச்சொல்லறிவு (நிகண்டுணர்ச்சி);

55. யாப்பறிவு;

56. அணியறிவு (அலங்காரவுணர்ச்சி);

57. மாயக்கலை (சாலவித்தை);

58. ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்);

59. சூதாட்டம்;

60. சொக்கட்டான்;

61. பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை;

62. யானயேற்றம், குதிரையேற்றம் பயிற்சி;

63. படக்கலப் பயிற்சி;

64. உடற் (தேகப்) பயிற்சி (சது.).