Welcome To Music Bookshelf
Music has always been an important part of Indian life.!
Tamil Music Books Online Free Reading


Indian Music

Music has always been an important part of Indian life. The range of musical phenomenon in India extends from simple melodies to what is one of the most well- developed "systems" of classical music in the world. There are references to various string and wind instruments, as well as several kinds of drums and cymbals, in the Vedas. Some date the advent of the system of classical Indian music to Amir Khusro. Muslim rulers and noblemen freely extended their patronage to music. In the courts of the Mughal emperors, music is said to have flourished, and the Tansen was one of the jewels of Akbar's court.

The great poet-saints who chose to communicate in the vernacular tongues brought forth a great upheaval in north India and the Bhakti or devotional movements they led gained many adherents. The lyrics of Surdas, Tulsidas, and most particularly Kabir and Mirabai continue to be immensely popular. By the sixteenth century, the division between North Indian (Hindustani) and South Indian (Carnatic) music was also being more sharply delineated. Classical music, both Hindustani and Carnatic, may be either instrumental or vocal.

Hindustani Gharanas

There is a rich tradition of Gharanas in classical Hindustani music. The music Gharanas are also called styles. These schools or Gharanas have their basis in the traditional mode of musical training and education. Every Gharana has its own distinct features.

Hindustani School

Hindustani classical music is an Indian classical music tradition. It originated in North India around 13th and 14th centuries. In contrast to Carnatic music, the other main Indian classical music tradition from South India, the Hindustani classical music was not only influenced by ancient Hindu musical traditions and Vedic philosophy but also by the Persian elements.

Music Glossary

Achal Swaras are the fixed swaras of the seven musical notes. Sa and Pa are the achal swaras of the Indian classical music. The term Arohi, also known as Arohana and Aroh, is used to define the ascending melody in music.

Indian Music Instruments

Sitar is of the most popular music instruments of North India. The Sitar has a long neck with twenty metal frets and six to seven main cords. Below the frets of Sitar are thirteen sympathetic strings which are tuned to the notes of the Raga. A gourd, which acts as a resonator for the strings is at the lower end of the neck of the Sitar.

Carnatic Music

Carnatic music or Carnatic sangeet is the south Indian classical music. Carnatic music has a rich history and tradition and is one of the gems of world music. Carnatic Sangeet has developed in the south Indian states of Tamil Nadu, Kerala, Andhra Pradesh and Karnataka.

Indian Film Music

One of the most popular Indian music forms is the Filmi music. Tamil film industry, popularly known as Kollywood, along with Indian regional film industries, produces thousands of films a year, most of which are musicals and feature elaborate song and dance numbers.

Indian Fusion Music

Fusion is not a very old trend in Indian music. Fusion trend is said to have begun with Ali Akbar Khan's 1955 performance in the United States. Indian fusion music came into being with rock and roll fusions with Indian music in the 1960s and 1970s

Ghazals

Ghazal is a common and popular form of music in Indian and Pakistan. Strictly speaking, it is not a musical form at all but a poetic recitation. However, today it is commonly conceived of as an Urdu song whose prime importance is given to the lyrics. Ghazal traces its roots in classical Arabic poetry.

Folk Music

India is a land of cultural diversities. Every region in India has its own form of folk music. This rich tradition of folk music is very much alive in not just rural India, but also in some metros. Though one may say that music has acquired a totally different definition with the arrival of pop culture and new age cinema, there are many who would beg to differ.

Shayari

Shayari or rhyming poetry basically comprises of a couplet known as Sher. This is the way that this unique and beautiful form of poetry derives the name Sher O Shayari. Most of the forms of Shayari are found in the Urdu language. However, one may find Shero Shayari in Hindi, Punjabi, etc.

Indian Classical Music Instruments List

TANPURA

SHENNAI

VEENA

TABLA

PAKHWAJ

BANSURI

SAROD

SITAR

HARMONIUM

SARANGI

Carnatic Notes

  • 1

    கனகாங்கி

    கனகாங்கி கர்நாடக இசையின் முதல் மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் முதல் இராகத்திற்கு கனகாம்பரி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

    ஆரோகணம்: ஸ ரி1 க1 ம1 ப த1 நி1 ஸ்
    அவரோகணம்: ஸ் நி1 த1 ப ம1 க1 ரி1 ஸ

  • 2

    ரத்னாங்கி

    ரத்னாங்கி கர்நாடக இசையின் 2 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 2வது இராகத்திற்கு பேனத்யுதி என்ற பெயர் உன்டு.

    ஆரோகணம்: ஸ ரி1 க1 ம1 ப த1 நி2 ஸ்
    அவரோகணம்: ஸ் நி2 த1 ப ம1 க1 ரி1 ஸ

  • 3

    கானமூர்த்தி

    கானமூர்த்தி இராகம் கர்நாடக இசையின் 3வது மேளகர்த்தா இராகம் ஆகும். இந்த இராகம் கருணைச் சுவையை வெளிப்படுத்துகிறது. அசம்பூர்ண பத்ததியில் 3வது இராகத்திற்கு கானஸாமவராளி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

    ஆரோகணம்: ஸ ரி1 க1 ம1 ப த1 நி3 ஸ்
    அவரோகணம்: ஸ் நி3 த1 ப ம1 க1 ரி1 ஸ

  • 4

    வனஸ்பதி

    வனஸ்பதி கர்நாடக இசையின் 4வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 4வது இராகத்திற்கு பானுமதி என்ற பெயர் உன்டு.

    ஆரோகணம்: ஸ ரி1 க1 ம1 ப த2 நி2 ஸ்
    அவரோகணம்: ஸ் நி2 த2 ப ம1 க1 ரி1 ஸ

  • 5

    மானவதி

    மானவதி கர்நாடக இசையின் 5 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 5 வது மேளகர்த்தா மனோரஞ்சனி ஆகும்.

    ஆரோகணம்: ஸ ரி1 க1 ம1 ப த2 நி3 ஸ்
    அவரோகணம்: ஸ் நி3 த2 ப ம1 க1 ரி1 ஸ

  • 6

    தானரூபி

    தானரூபி கர்நாடக இசையின் 6 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 6 வது இராகத்திற்கு தனுகீர்த்தி என்ற பெயர்..

    ஆரோகணம்: ஸ ரி1 க1 ம1 ப த3 நி3 ஸ்
    அவரோகணம்: ஸ் நி3 த3 ப ம1 க1 ரி1 ஸ

  • 7

    சேனாவதி

    சேனாவதி கர்நாடக இசையின் 7வது மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 7வது இராகம் சேனாகிரிணி.

    ஆரோகணம்: ஸ ரி1 க2 ம1 ப த1 நி1 ஸ்
    அவரோகணம்: ஸ் நி1 த1 ப ம1 க2 ரி1 ஸ

  • 8

    தோடி

    தோடி அல்லது ஹனுமத்தோடி என்பது கர்நாடக இசையின், எந்நேரமும் பாடக்கூடிய 8 வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண பத்ததியில் 8 வது இராகத்திற்கு ஜனதோடி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.[இந்துஸ்தானி இசையில் பைரவி தாட் என்றழைக்கப்படுகிறது.

    ஆரோகணம்: ஸ ரி1 க2 ம1 ப த1 நி2 ஸ்
    அவரோகணம்: ஸ் நி2 த1 ப ம1 க2 ரி1 ஸ

  • 9

    தேனுகா

    தேனுகா இராகம், கர்நாடக இசையின் 9 ஆவது மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 9 ஆவது இராகத்திற்குத் துனிபின்னஷட்ஜம் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

    ஆரோகணம்: ஸ ரி1 க2 ம1 ப த1 நி3 ஸ்
    அவரோகணம்: ஸ் நி3 த1 ப ம1 க2 ரி1 ஸ

  • 10

    நாடகப்பிரியா

    நாடகப்பிரியா கர்நாடக இசையின் 10 வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 10 வது மேளத்திற்கு நடாபரணம் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

    ஆரோகணம்: ஸ ரி1 க2 ம1 ப த2 நி2 ஸ்
    அவரோகணம்: ஸ் நி2 த2 ப ம1 க2 ரி1 ஸ

  • 11

    கோகிலப்பிரியா

    கோகிலப்பிரியா கர்நாடக இசையின் 11 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் (அசம்பூர்ண மேள பத்ததியில்) 11 வது இராகத்திற்கு கோகிலாரவம் என்ற பெயர்.

    ஆரோகணம்: ஸ ரி1 க2 ம1 ப த2 நி3 ஸ்
    அவரோகணம்: ஸ் நி3 த2 ப ம1 க2 ரி1 ஸ

  • 12

    ரூபவதி

    ரூபவதி கர்நாடக இசையின் 12 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 12 வது இராகத்திற்கு அதே பெயரே.

    ஆரோகணம்: ஸ ரி1 க2 ம1 ப த3 நி3 ஸ்
    அவரோகணம்: ஸ் நி3 த3 ப ம1 க2 ரி1 ஸ

  • 13

    காயகப்பிரியா

    காயகப்பிரியா கர்நாடக இசையின் மேளகர்த்தா இராகங்களில் 13வது இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் இந்த இராகத்திற்கு கேயஹெஜ்ஜஜ்ஜி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

    ஆரோகணம்: ஸ ரி1 க3 ம1 ப த1 நி1 ஸ்
    அவரோகணம்: ஸ் நி1 த1 ப ம1 க3 ரி1 ஸ

  • 14

    வகுளாபரணம்

    வகுளாபரணம் கர்நாடக இசையின் 14வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 14வது மேளத்திற்கு வாடிவஸந்தபைரவி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

    ஆரோகணம்: ஸ ரி1 க3 ம1 ப த1 நி2 ஸ்
    அவரோகணம்: ஸ் நி2 த1 ப ம1 க3 ரி1 ஸ

  • 15

    மாயாமாளவகௌளை

    மாயாமாளவகௌளை என்பது கருணை, பக்தி ஆகிய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் இராகம் ஆகும். கர்நாடக இசையின் 15 வது மேளகர்த்தா எப்போதும் பாடத்தகுந்த இராகம். இந்துஸ்தானி இசையில் இதற்கு பைரவ தாட் எனப் பெயர்.

    ஆரோகணம்: ஸ ரி1 க3 ம1 ப த1 நி3 ஸ்
    அவரோகணம்: ஸ் நி3 த1 ப ம1 க3 ரி1 ஸ

  • 16

    சக்ரவாகம்

    சக்ரவாகம் கர்நாடக இசையின் 16 வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண மேள பத்ததியில் 16 வது இராகத்திற்குத் தோயவேகவாகினி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

    ஆரோகணம்: ஸ ரி1 க3 ம1 ப த2 நி2 ஸ்
    அவரோகணம்: ஸ் நி2 த2 ப ம1 க3 ரி1 ஸ

  • 17

    சூர்யகாந்தம்

    சூர்யகாந்தம் கர்நாடக இசையின் 17 வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 17 வது இராகத்தின் பெயர் சாயாவதி.

    ஆரோகணம்: ஸ ரி1 க3 ம1 ப த2 நி3 ஸ்
    அவரோகணம்: ஸ் நி3 த2 ப ம1 க3 ரி1 ஸ

  • 18

    ஹாடகாம்பரி

    ஹாடகாம்பரி கர்நாடக இசையின் 18 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 18 வது இராகத்திற்கு ஜயசுத்தமாளவி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

    ஆரோகணம்: ஸ ரி1 க3 ம1 ப த3 நி3 ஸ்
    அவரோகணம்: ஸ் நி3 த3 ப ம1 க3 ரி1 ஸ

  • 19

    ஜங்காரத்வனி

    ஜங்காரத்வனி கர்நாடக இசையின் 19வது மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 19வது இராகத்திற்கு ஜங்காரபிரமரி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

    ஆரோகணம்: ஸ ரி2 க2 ம1 ப த1 நி1 ஸ்
    அவரோகணம்: ஸ் நி1 த1 ப ம1 க2 ரி2 ஸ

  • 20

    நடபைரவி

    நடபைரவி கர்நாடக இசையின் 20 வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 20 வது இராகத்தின் பெயர் நாரீரீதிகௌள. இந்துஸ்தானி இராகத்தில் இதற்கு ஈடானது அசாவேரி தாட்.

    ஆரோகணம்: ஸ ரி2 க2 ம1 ப த1 நி2 ஸ்
    அவரோகணம்: ஸ் நி2 த1 ப ம1 க2 ரி2 ஸ

  • 21

    கீரவாணி

    கீரவாணி என்பது கர்நாடக இசையில் 21வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண மேள பத்ததியில் இந்த இராகத்தின் பெயர் கிரணாவளி. விரிவான ஆலாபனைக்கு இடம் கொடுப்பதுடன், பக்தி சுவையையும் வெளிப்படுத்தும். எப்போதும் பாடலாம்.

    ஆரோகணம்: ஸ ரி2 க2 ம1 ப த1 நி3 ஸ்
    அவரோகணம்: ஸ் நி3 த1 ப ம1 க2 ரி2 ஸ

  • 22

    கரகரப்பிரியா

    கரகரப்பிரியா (கரஹரப்பிரியா) கர்நாடக இசையின் 22 வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண மேள பத்ததியில் சிறீராகம் 22 வது இராகமாகக் கொள்ளப்படுகிறது. இந்துஸ்தானி இசையில் இதற்கு "காபிதாட்" என்பது பெயர்.

    ஆரோகணம்: ஸ ரி2 க2 ம1 ப த2 நி2 ஸ்
    அவரோகணம்: ஸ் நி2 த2 ப ம1 க2 ரி2 ஸ

  • 23

    கௌரிமனோகரி

    கௌரிமனோகரி கர்நாடக இசையின் 23வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூரண மேள பத்ததியில் இந்த இராகத்திற்கு கௌரீ வேளாவளி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

    ஆரோகணம்: ஸ ரி2 க2 ம1 ப த2 நி3 ஸ்
    அவரோகணம்: ஸ் நி3 த2 ப ம1 க2 ரி2 ஸ

  • 24

    வருணப்பிரியா

    வருணப்பிரியா கர்நாடக இசையின் 24வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 24வது இராகத்திற்கு பெயர் வீரவசந்தம்.

    ஆரோகணம்: ஸ ரி2 க2 ம1 ப த3 நி3 ஸ்
    அவரோகணம்: ஸ் நி3 த3 ப ம1 க2 ரி2 ஸ

  • 25

    மாரரஞ்சனி

    மாரரஞ்சனி கர்நாடக இசையின் மேளகர்த்தா இராகங்களில் 25வது இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 25வது இராகத்திற்கு ஷராவதி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

    ஆரோகணம்: ஸ ரி2 க3 ம1 ப த1 நி1 ஸ்
    அவரோகணம்: ஸ் நி1 த1 ப ம1 க3 ரி2 ஸ

  • 26

    சாருகேசி

    சாருகேசி கர்நாடக இசையின் 26வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண மேள பத்ததியில் இந்த இராகத்தின் பெயர் தரங்கிணி.

    ஆரோகணம்: ஸ ரி2 க3 ம1 ப த1 நி2 ஸ்
    அவரோகணம்: ஸ் நி2 த1 ப ம1 க3 ரி2 ஸ

  • 27

    சரசாங்கி

    சரசாங்கி என்பது கர்நாடக இசையில் 27வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண மேள பத்ததியில் சௌரசேனா என்று பெயர்.

    ஆரோகணம்: ஸ ரி2 க3 ம1 ப த1 நி3 ஸ்
    அவரோகணம்: ஸ் நி3 த1 ப ம1 க3 ரி2 ஸ

  • 28

    அரிக்காம்போதி

    அரிக்காம்போதி அல்லது ஹரிகாம்போஜி கர்நாடக இசை முறையில் 28வது மேளகர்த்தா அல்லது பிறப்பு (ஜனக) இராகமாகும். விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம். அசம்பூர்ண (எழுநிறைவற்ற) மேள பத்ததியில் இவ்விராகத்திற்கு அரிக்கேதாரகௌள என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்துஸ்தானி இசையில் இதற்கு கமஜ் தாட் என்பது பெயர்.

    ஆரோகணம்: ஸ ரி2 க3 ம1 ப த2 நி2 ஸ்
    அவரோகணம்: ஸ் நி2 த2 ப ம1 க3 ரி2 ஸ

  • 29

    தீரசங்கராபரணம்

    சங்கராபரணம் (அல்லது தீரசங்கராபரணம்) கர்நாடக இசை முறையில் 29 ஆவது மேளகர்த்தா அல்லது ஜனக இராகமாகும். விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம். இந்துஸ்தானி இசையில் பிலாவல் தாட் என்றழைக்கப்ப்டுகிறது.

    ஆரோகணம்: ஸ ரி2 க3 ம1 ப த2 நி3 ஸ்
    அவரோகணம்: ஸ் நி3 த2 ப ம1 க3 ரி2 ஸ

  • 30

    நாகாநந்தினி

    நாகாநந்தினி கர்நாடக இசையின் 30 வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 30 வது இராகத்தின் பெயர் நாகாபரணம்.

    ஆரோகணம்: ஸ ரி2 க3 ம1 ப த3 நி3 ஸ்
    அவரோகணம்: ஸ் நி3 த3 ப ம1 க3 ரி2 ஸ

  • 31

    யாகப்பிரியா

    யாகப்பிரியா கர்நாடக இசையின் மேளகர்த்தா இராகங்களில் 31வது இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 31வது இராகத்திற்கு கலாவதி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

    ஆரோகணம்: ஸ ரி3 க3 ம1 ப த1 நி1 ஸ்
    அவரோகணம்: ஸ் நி1 த1 ப ம1 க3 ரி3 ஸ

  • 32

    ராகவர்த்தனி

    ராகவர்த்தனி கர்நாடக இசையின் 32 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 32 வது இராகத்திற்கு ராகசூடாமணி என்ற பெயர்.

    ஆரோகணம்: ஸ ரி3 க3 ம1 ப த1 நி2 ஸ்
    அவரோகணம்: ஸ் நி2 த1 ப ம1 க3 ரி3 ஸ

  • 33

    காங்கேயபூஷணி

    காங்கேயபூஷணி இராகம், கர்நாடக இசையின் மேளகர்த்தா இராகங்களில் 33வது மேளம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 33வது இராகத்திற்கு கங்காதரங்கிணி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

    ஆரோகணம்: ஸ ரி3 க3 ம1 ப த1 நி3 ஸ்
    அவரோகணம்: ஸ் நி3 த1 ப ம1 க3 ரி3 ஸ

  • 34

    வாகதீச்வரி

    வாகதீச்வரி கர்நாடக இசையின் 34 வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 34 வது இராகத்திற்கு போகாச்சாயாநாட என்று பெயர்.

    ஆரோகணம்: ஸ ரி3 க3 ம1 ப த2 நி2 ஸ்
    அவரோகணம்: ஸ் நி2 த2 ப ம1 க3 ரி3 ஸ

  • 35

    சூலினி

    சூலினி கர்நாடக இசையின் 35வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 35வது இராகத்தின் பெயர் ஷைலதேசாக்ஷி.

    ஆரோகணம்: ஸ ரி3 க3 ம1 ப த2 நி3 ஸ்
    அவரோகணம்: ஸ் நி3 த2 ப ம1 க3 ரி3 ஸ

  • 36

    சலநாட

    சலநாட கர்நாடக இசையின் 36 வது மேளகர்த்தா அல்லது ஜனக இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியிலும் 36 வது இராகத்தின் பெயர் சலநாட.

    ஆரோகணம்: ஸ ரி3 க3 ம1 ப த3 நி3 ஸ்
    அவரோகணம்: ஸ் நி3 த3 ப ம1 க3 ரி3 ஸ

  • 37

    சாலகம்

    சாலகம் கர்நாடக இசையின் 37வது மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 37வது இராகத்திற்கு சௌகந்தினி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

    ஆரோகணம்: ஸ ரி1 க1 ம2 ப த1 நி1 ஸ்
    அவரோகணம்: ஸ் நி1 த1 ப ம2 க1 ரி1 ஸ

  • 38

    ஜலார்ணவம்

    ஜலார்ணவம் கர்நாடக இசையின் 38வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 38வது இராகத்திற்கு ஜகன்மோகனம் என்ற பெயர்.

    ஆரோகணம்: ஸ ரி1 க1 ம2 ப த1 நி2 ஸ்
    அவரோகணம்: ஸ் நி2 த1 ப ம2 க1 ரி1 ஸ

  • 39

    ஜாலவராளி

    ஜாலவராளி இராகம் கர்நாடக இசையின் 39வது மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 39வது இராகத்திற்கு தாலிவராளி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

    ஆரோகணம்: ஸ ரி1 க1 ம2 ப த1 நி3 ஸ்
    அவரோகணம்: ஸ் நி3 த1 ப ம2 க1 ரி1 ஸ

  • 40

    நவநீதம்

    நவநீதம் கர்நாடக இசையின் 40வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 40வது இராகத்திற்கு நபோமணி என்ற பெயர்.

    ஆரோகணம்: ஸ ரி1 க1 ம2 ப த2 நி2 ஸ்
    அவரோகணம்: ஸ் நி2 த2 ப ம2 க1 ரி1 ஸ

  • 41

    பாவனி

    பாவனி கர்நாடக இசையின் 41வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 41வது மேளகர்த்தா கும்பினி ஆகும்.

    ஆரோகணம்: ஸ ரி1 க1 ம2 ப த2 நி3 ஸ்
    அவரோகணம்: ஸ் நி3 த2 ப ம2 க1 ரி1 ஸ

  • 42

    ரகுப்பிரியா

    ரகுப்பிரியா கர்நாடக இசையின் 42வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 42வது இராகத்திற்கு ரவிகிரியா என்ற பெயர்.

    ஆரோகணம்: ஸ ரி1 க1 ம2 ப த3 நி3 ஸ்
    அவரோகணம்: ஸ் நி3 த3 ப ம2 க1 ரி1 ஸ

  • 43

    கவாம்போதி

    கவாம்போதி கர்நாடக இசையின் 43வது மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 43வது இராகம் கீர்வாணி (ஆங்கிலத்தில் Geervaani).

    ஆரோகணம்: ஸ ரி1 க2 ம2 ப த1 நி1 ஸ்
    அவரோகணம்: ஸ் நி1 த1 ப ம2 க2 ரி1 ஸ

  • 44

    பவப்பிரியா

    பவப்பிரியா கர்நாடக இசையின் 44 வது மேளகர்த்தா இராகமாகும். இந்த மேளத்தின் ஜன்யமான பவானி என்ற இராகம், அசம்பூர்ண மேள பத்ததியில் 44 வது மேளமாகக் கையாளப்படுகிறது.

    ஆரோகணம்: ஸ ரி1 க2 ம2 ப த1 நி2 ஸ்
    அவரோகணம்: ஸ் நி2 த1 ப ம2 க2 ரி1 ஸ

  • 45

    சுபபந்துவராளி

    சுபபந்துவராளி இராகம் கர்நாடக இசையின் 45 வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண பத்ததியில் இந்த இராகத்திற்கு சிவபந்துவராளி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்துஸ்தானி இசையில் தோடி தாட் என்று பெயர்.

    ஆரோகணம்: ஸ ரி1 க2 ம2 ப த1 நி3 ஸ்
    அவரோகணம்: ஸ் நி3 த1 ப ம2 க2 ரி1 ஸ

  • 46

    ஷட்விதமார்க்கிணி

    ஷட்விதமார்க்கிணி இராகம், கர்நாடக இசையின் 46 வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் ஸ்தவராஜம் 46 வது இராகமாகக் கொள்ளப்படுகிறது.

    ஆரோகணம்: ஸ ரி1 க2 ம2 ப த2 நி2 ஸ்
    அவரோகணம்: ஸ் நி2 த2 ப ம2 க2 ரி1 ஸ

  • 47

    சுவர்ணாங்கி

    சுவர்ணாங்கி கர்நாடக இசையின் 47 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் (அசம்பூர்ண மேள பத்ததியில்) இந்த இராகத்திற்கு ஸௌவீரம் என்ற பெயர் உன்டு.

    ஆரோகணம்: ஸ ரி1 க2 ம2 ப த2 நி3 ஸ்
    அவரோகணம்: ஸ் நி3 த2 ப ம2 க2 ரி1 ஸ

  • 48

    திவ்யமணி

    திவ்யமணி கர்நாடக இசையின் 48வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 48வது இராகத்திற்கு பெயர் ஜீவந்திகா.

    ஆரோகணம்: ஸ ரி1 க2 ம2 ப த3 நி3 ஸ்
    அவரோகணம்: ஸ் நி3 த3 ப ம2 க2 ரி1 ஸ

  • 49

    தவளாம்பரி

    தவளாம்பரி கர்நாடக இசையின் மேளகர்த்தா இராகங்களில் 49வது இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 49வது இராகத்திற்கு தவளாங்கம் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது..

    ஆரோகணம்: ஸ ரி1 க3 ம2 ப த1 நி1 ஸ்
    அவரோகணம்: ஸ் நி1 த1 ப ம2 க3 ரி1 ஸ

  • 50

    நாமநாராயணி

    நாமநாராயணி கர்நாடக இசையின் 50 வது மேளகர்த்தா இராகமாகும். இந்த மேளத்திற்கு அசம்பூர்ண மேள பத்ததியில் நாமதேஷி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

    ஆரோகணம்: ஸ ரி1 க3 ம2 ப த1 நி2 ஸ்
    அவரோகணம்: ஸ் நி2 த1 ப ம2 க3 ரி1 ஸ

  • 51

    காமவர்த்தனி

    காமவர்த்தனி கர்நாடக இசையின் 51 வது மேளகர்த்தா இராகம். இவ்விராகமே பந்துவராளி என்றும் அழைக்கப்படுகின்றது. அசம்பூர்ன மேள பத்ததியில் காசிராமக்கிரியா என்றழைக்கப்பட்டது. இந்துஸ்தானி இசையில் பூர்வி தாட் என்று பெயர்.

    ஆரோகணம்: ஸ ரி1 க3 ம2 ப த1 நி3 ஸ்
    அவரோகணம்: ஸ் நி3 த1 ப ம2 க3 ரி1 ஸ

  • 52

    ராமப்பிரியா

    ராமப்பிரியா கர்நாடக இசை முறையில் 52வது மேளகர்த்தா அல்லது ஜனக இராகமாகும். இந்த மேளத்தில் பிறக்கும் ரமாமனோகரி அசம்பூர்ண மேளபத்ததியில் 52வது மேளமாக விளங்குகிறது.

    ஆரோகணம்: ஸ ரி1 க3 ம2 ப த2 நி2 ஸ்
    அவரோகணம்: ஸ் நி2 த2 ப ம2 க3 ரி1 ஸ

  • 53

    கமனாச்ரம

    கமனாச்ரம அல்லது காமனாழ்சிரம கர்நாடக இசையின் 53 ஆவது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண பத்ததியில் இந்த இராகத்திற்கு கமகக்கிரிய என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

    ஆரோகணம்: ஸ ரி1 க3 ம2 ப த2 நி3 ஸ்
    அவரோகணம்: ஸ் நி3 த2 ப ம2 க3 ரி1 ஸ

  • 54

    விஷ்வம்பரி

    விஷ்வம்பரி கர்நாடக இசையின் 54 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 54 வது இராகத்திற்கு வம்சவதி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

    ஆரோகணம்: ஸ ரி1 க3 ம2 ப த3 நி3 ஸ்
    அவரோகணம்: ஸ் நி3 த3 ப ம2 க3 ரி1 ஸ

  • 55

    சியாமளாங்கி

    சியாமளாங்கி கர்நாடக இசையின் 55வது மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 55வது இராகத்திற்கு சியாமளம் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

    ஆரோகணம்: ஸ ரி2 க2 ம2 ப த1 நி1 ஸ்
    அவரோகணம்: ஸ் நி1 த1 ப ம2 க2 ரி2 ஸ

  • 56

    சண்முகப்பிரியா

    சண்முகப்பிரியா கர்நாடக இசையின் 56வது மேளகர்த்தா இராகமாகும். விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம். இந்த இராகத்தின் தோற்றமான (ஜன்யமான) சாமரம் அசம்பூர்ண மேள பத்ததியில் 56 வது இராகமாக விளங்குகிறது.

    ஆரோகணம்: ஸ ரி2 க2 ம2 ப த1 நி2 ஸ்
    அவரோகணம்: ஸ் நி2 த1 ப ம2 க2 ரி2 ஸ

  • 57

    சிம்மேந்திரமத்திமம்

    சிம்மேந்திரமத்திமம் கர்நாடக இசையின் 57வது மேளகர்த்தா இராகம். விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம். இந்த இராகத்தின் ஜன்யமான (வழி இராகமாகிய) ஸூமத்யுதி அசம்பூர்ண மேள பத்ததியில் 57வது இராகமாக விளங்குகிறது.

    ஆரோகணம்: ஸ ரி2 க2 ம2 ப த1 நி3 ஸ்
    அவரோகணம்: ஸ் நி3 த1 ப ம2 க2 ரி2 ஸ

  • 58

    ஹேமவதி

    ஹேமவதி கர்நாடக இசையின் 58வது மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண மேள பத்ததியில் இந்த மேளத்திற்கு தேசிஸிம்ஹாரவம் என்று பெயர்

    ஆரோகணம்: ஸ ரி2 க2 ம2 ப த2 நி2 ஸ்
    அவரோகணம்: ஸ் நி2 த2 ப ம2 க2 ரி2 ஸ

  • 59

    தர்மவதி

    தர்மவதி கர்நாடக இசையின் 59வது மேளகர்த்தா இராகமாகும். எப்பொழுதும் பாடக்கூடிய இராகம். அசம்பூர்ண மேளபத்ததியில் இந்த இராகத்திற்கு தாமவதி என்று பெயர்.

    ஆரோகணம்: ஸ ரி2 க2 ம2 ப த2 நி3 ஸ்
    அவரோகணம்: ஸ் நி3 த2 ப ம2 க2 ரி2 ஸ

  • 60

    நீதிமதி

    நீதிமதி கர்நாடக இசையின் 60வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 60வது இராகத்திற்கு பெயர் நிஷதம்.

    ஆரோகணம்: ஸ ரி2 க2 ம2 ப த3 நி3 ஸ்
    அவரோகணம்: ஸ் நி3 த3 ப ம2 க2 ரி2 ஸ

  • 61

    காந்தாமணி

    காந்தாமணி கர்நாடக இசையின் மேளகர்த்தா இராகங்களில் 61வது இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 61வது இராகத்திற்கு குந்தலம் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

    ஆரோகணம்: ஸ ரி2 க3 ம2 ப த1 நி1 ஸ்
    அவரோகணம்: ஸ் நி1 த1 ப ம2 க3 ரி2 ஸ

  • 62

    ரிஷபப்பிரியா

    ரிஷபப்பிரியா கர்நாடக இசையின் 62வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண மேளபத்ததியில் இந்த இராகத்திற்கு ரதிப்பிரியா என்று பெயர்.

    ஆரோகணம்: ஸ ரி2 க3 ம2 ப த1 நி2 ஸ்
    அவரோகணம்: ஸ் நி2 த1 ப ம2 க3 ரி2 ஸ

  • 63

    லதாங்கி

    லதாங்கி கர்நாடக இசையின் 63வது மேளகர்த்தா இராகம். இரவில் பாடுவதற்கு ஏற்றது. அசம்பூர்ண மேளபத்ததியில் இந்த இராகத்திற்கு கீதப்பிரியா என்று பெயர்.

    ஆரோகணம்: ஸ ரி2 க3 ம2 ப த1 நி3 ஸ்
    அவரோகணம்: ஸ் நி3 த1 ப ம2 க3 ரி2 ஸ

  • 64

    வாசஸ்பதி

    வாசஸ்பதி கர்நாடக இசையின் 64வது மேளகர்த்தா இராகம். எப்பொழுதும் பாடக்கூடியது. அசம்பூர்ண (குறையேழு) மேளபத்ததியில், முத்துசாமி தீட்சதர் மரபில் இந்த இராகத்திற்கு பூஷாவதி என்று பெயர்.[1] [2] இந்த இராகம் மற்ற இராகங்களைப் போல வட இந்திய இசையில் எடுத்தாளப்படுகின்றது.

    ஆரோகணம்: ஸ ரி2 க3 ம2 ப த2 நி2 ஸ்
    அவரோகணம்: ஸ் நி2 த2 ப ம2 க3 ரி2 ஸ

  • 65

    மேசகல்யாணி

    மேச கல்யாணி (அல்லது கல்யாணி) கர்நாடக இசையின் 65வது மேளகர்த்தா இராகம். எப்பொழுதும் பாடக் கூடிய இவ்விராகத்திற்கு மாலைப் பொழுது மிகவும் பொருத்தமானதாகும். நல்ல எடுப்பான இராகம் ஆகையால், நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் பாடக் கூடிய இராகம். அசம்பூர்ண மேளபத்ததியில் இந்த இராகத்திற்கு சாந்த கல்யாணி என்று பெயர்.இந்துஸ்தானி இசையில் இவ்விராகத்திற்கு யமன் தாட் என்று பெயர்.

    ஆரோகணம்: ஸ ரி2 க3 ம2 ப த2 நி3 ஸ்
    அவரோகணம்: ஸ் நி3 த2 ப ம2 க3 ரி2 ஸ

  • 66

    சித்ராம்பரி

    சித்ராம்பரி கர்நாடக இசையின் 66வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 66வது இராகத்தின் பெயர் சதுரங்கிணி.

    ஆரோகணம்: ஸ ரி2 க3 ம2 ப த3 நி3 ஸ்
    அவரோகணம்: ஸ் நி3 த3 ப ம2 க3 ரி2 ஸ

  • 67

    சுசரித்ர

    சுசரித்ர கர்நாடக இசையின் மேளகர்த்தா இராகங்களில் 67வது இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 67வது இராகத்திற்கு ஸந்தான மஞ்சரி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

    ஆரோகணம்: ஸ ரி3 க3 ம2 ப த1 நி1 ஸ்
    அவரோகணம்: ஸ் நி1 த1 ப ம2 க3 ரி3 ஸ

  • 68

    ஜோதிஸ்வரூபிணி

    ஜோதிஸ்வரூபிணி கர்நாடக இசையின் 68 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 68 வது இராகத்திற்கு ஜோதி அல்லது ஜோதிராகம் என்ற பெயர்.

    ஆரோகணம்: ஸ ரி3 க3 ம2 ப த1 நி2 ஸ்
    அவரோகணம்: ஸ் நி2 த1 ப ம2 க3 ரி3 ஸ

  • 69

    தாதுவர்த்தனி

    தாதுவர்த்தனி இராகம், கர்நாடக இசையின் 69வது மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 69வது இராகத்திற்கு தௌதபஞ்சமம் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

    ஆரோகணம்: ஸ ரி3 க3 ம2 ப த1 நி3 ஸ்
    அவரோகணம்: ஸ் நி3 த1 ப ம2 க3 ரி3 ஸ

  • 70

    நாசிகாபூஷணி

    நாசிகாபூஷணி கர்நாடக இசையின் 70 வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 70 வது இராகத்தின் பெயர் நாஸாமணி.

    ஆரோகணம்: ஸ ரி3 க3 ம2 ப த2 நி2 ஸ்
    அவரோகணம்: ஸ் நி2 த2 ப ம2 க3 ரி3 ஸ

  • 71

    கோசலம்

    கோசலம் கர்நாடக இசையின் 71வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 71வது இராகத்தின் பெயர் குஸுமாகரம்.

    ஆரோகணம்: ஸ ரி3 க3 ம2 ப த2 நி3 ஸ்
    அவரோகணம்: ஸ் நி3 த2 ப ம2 க3 ரி3 ஸ

  • 72

    ரசிகப்பிரியா

    ரசிகப்பிரியா கர்நாடக இசையின் 72வது மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண மேளபத்ததியில் இந்த இராகத்திற்கு ரசமஞ்சரி என்று பெயர்.

    ஆரோகணம்: ஸ ரி3 க3 ம2 ப த3 நி3 ஸ்
    அவரோகணம்: ஸ் நி3 த3 ப ம2 க3 ரி3 ஸ

பழந்தமிழ் இசை

பழந்தமிழர் இசைக்கருவியான முரசு

பழந்தமிழ் இசை என்பததமிழரின் மரபவழியான மிகப் பழைமையான இசைச் செல்வமாகும். பழந்தமிழிசையெனக் குறிப்பிடும் போத ஐரோப்பியர் ஆட்சிக்கமுற்பட்ட காலத் தமிழ் மொழியின் இசை நடை, சிறப்புகள், பெற்ற மாற்றங்கள் ஆகியவை இங்ககுறிப்பிடப்படுகிறது. சங்கத்தமிழானதஇயல், இசை, நாடகமென மூன்றவகையாகும். இதில் இசை என்பததமிழிசையாகும். பழந்தமிழ் மக்கள் வேறஇன மக்களுடன் நெருங்கிய தொடர்பகொள்வதற்கமுன்பே இசையும் அதோடஇணைந்கூத்தும் உருவாகி வளரத் தொடங்கின. இசை, கூத்தஆகியவற்றின் கலை நுட்பங்களை விளக்கும் இலக்கணத் தமிழ் நூல்கள் எழுந்தன. இந்நூல்கள் எழுதப்பட்ட காலம் முச்சங்காலமென அறியப்படுகிறது. இம்முச்சங்காலம் இற்றைக்கஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கமுற்பட்டது. எனவே தமிழர் இசையும் கூத்தும் மூவாயிரம் ஆண்டுகளுக்கமுன்பிருந்தே செவ்விய கலைகளாவிளங்கின என உறுதியாகக் கொள்ளலாம்.

கி. பி. 16 ஆம் நூற்றாண்டளவில் சிறப்பபெற்ற கர்நாடஇசைக்கும் தமிழிசைக்கும் பலவிதமான ஒற்றுமைகள் உண்டு. இன்றதழைத்தோங்கி இருக்கும் கர்நாடஇசையே தமிழிசையின் மறுவடிவம் என்றும் கூறுவர். சங்நூல்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, தொல்காப்பியம் ஆகிய நூல்களிலும், ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றானசிலப்பதிகாரத்திலும் தமிழிசை பற்றிய பல செய்திகள் கூறப்பட்டுள்ளன. கி. பி. ஆறாம் நூற்றாண்டில் தொடங்கி 10 ஆம் நூற்றாண்டவரை தோன்றிய இந்துசமய மறுமலர்ச்சிக் காலத்தில் அப்பர், திருஞான சம்பந்தர், மாணிக்கவாசகர் போன்ற நாயன்மார்கள் தோன்றி பழந்தமிழிசைக்குப் புத்துயிர் அளித்தனர், தமிழ் இசைக்கஇலக்கணம் வகுத்முதல்நூல் அகத்தியம் என்றஅறிஞர்கள் கூறுவர். ஆனால் அந்அரிய நூல் இப்போதஇல்லை. அகத்தியம் ஏழாயிரம் வருடங்களுக்கும் முன்னர் அகத்தியரால் எழுதப்பட்டதஎன்பததமிழாய்வாளர்களின் கருத்தாகும்.

தமிழிசையின் தொன்மை

இசையும் கூத்தும் ஒன்றோடொன்றஇணைந்கலைகள். கூத்தஎன்பதைப் பழந்தமிழ் மக்கள் நாடகம் என்றும் அழைத்தனர். நாட்டியம், ஆடல் என்ற சொற்களும் கூத்துக் கலையைக் குறிக்கும். முச்சங்காலத்தில் இசைக்கஇலக்கண நூல்கள் எழுதப்பட்டன. கூத்துக்கும் இலக்கணம் எழுதப்பட்டது. எனவே இரகலைகளை இணைத்தும் இலக்கண நூல்கள் எழுதப்பட்டன. இசைக்கஇலக்கணம் வகுத்நூல் அகத்தியம் என்பர். எனவே அகத்தியத்திற்கமுன்னரும் பல இசை நூல்கள் இருந்திருக்வேண்டும். அகத்தியத்திற்குப் பின்னர் தோன்றிய இசை நூல்களான பெருநாரை, பெருங்குருகு, முதுநாரை, முதுகுருகு, பஞ்சபாரதீயம், பதினாறுபடலம், வாய்ப்பியம், குலோத்துங்கன் இசைநூல் போன்ற நூல்களும் காலத்தால் அழிந்தன. எஞ்சிய நூல்கள்பற்றி இடைக்கால உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

நூல் எழுதியவர் கூறும் பொருள்
அகத்தியம் அகத்திய முனிவர் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழுக்கும் இலக்கணம் கூறும்.
இசை நுணுக்கம் சிகண்டி என்னும் முனிவர் இதஓர் இசைத் தமிழ்நூல்.
இந்திர காளியம் யாமளேந்திரர்
பஞ்சபாரதீயம் தேவவிருடி நாரதன்
பஞ்சமரபு அறிவனார் பழந்தமிழர் இசை, நாடஇலக்கண நூல். இசை மரபு, வாக்கிய மரபு, நிருத்மரபு, விநய மரபு, தாளமரபஎன்னும் ஐந்தமரபுகள் பற்றிய நூலிது.
பெருங்குருகு தெரியவில்லை இந்நூல் முதுகுருகஎன்றும் சொல்லப்படும்.
பெருநாரை தெரியவில்லை இந்நூல் முதுநாரை என்றும் சொல்லப்படும் ஓர் இசைநூல்.
தாளவகை யோத்து தெரியவில்லை தாள இலக்கணம் கூறும் பழந்தமிழ் நூல்.

தொல்காப்பியம்

பழந்தமிழ் இலக்கண நூல்களுள் முழுமையாகக் கிடைக்கும் நூல் தொல்காப்பியம். இசைத்தமிழ், தொடர்பான செய்திகளை இந்நூல் ஆங்காங்குக்கூறுகிறது. தமிழிசை பற்றிய நூல்களில், இன்றகிடைக்கப்பெறுகின்ற மிகத் தொன்மையான நூல் தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியர் காலம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டளவினதஎன்பதஅறிஞர்கள் கருத்து. இந்நூலின் காலக் கணிப்பதமிழர் இசையின் தொன்மையை உறுதிப்படுத்தும்.

இசையைத் தொழிலாகக் கொண்ட மக்கள் உபயோகப்படுத்தும் இசைக்கருவிக்குப் பறை என்றும், இன்பமாகப் பொழுதபோக்கும் மக்கள் பயன்படுத்தும் இசைக்கருவி யாழ் என்றும் தொல்காப்பியத்தில் இருவகை இசைக்கருவிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர், தொல்காப்பியம் பொருளதிகாரம் அகத்திணையியல் 18 ஆம் நூற்பா தமிழர் வாழ்க்கை நெறியின் அடிப்படைப் பண்பாட்டுக் கருவூலங்களைக் குறிப்பிடுகிறது. இந்நூலில் தெய்வம், உணா, மா, மரம், புள், பறை, யாழ் ஆகிய கருப்பொருள்கள் சொல்லப்பட்டுள்ளன. இந்ஏழும் தமிழர் பண்பாட்டுக் கருப்பொருள்கள். ஏழகருப்பொருளில் ஒன்றயாழ். மற்றொன்றபறை.

யாழ்

தொல்காப்பியம் கூறும் ‘யாழ்’ என்னும் சொல் பழந்தமிழர் வகுத்பண்ணிசையைக் குறிக்கும். இதமிடற்றிசை (குரலிசை), நரம்புக் கருவியிசை (யாழ் என்னும் தந்திக் கருவி இசை) காற்றுக் கருவியிசை (குழல் கருவியிசை)ஆகியவற்றின் முறைகளும் மரபுகளும் பற்றியதாகும். பண்வகைகளை ‘யாழின் பகுதி’ எனவும் இசைநூலை ‘நரம்பின் மறை’ எனவும் தொல்காப்பியர் குறித்துள்ளார். இதனால், பண்டைநாளில், நரம்புக் கருவியாகிய யாழினை அடிப்படையாகக் கொண்டே பண்களும் அவற்றின் திறங்களும் ஆராய்ந்தவகைப்படுத்தப்பட்டன என அறியலாம்.

பறை

தொல்காப்பியர் கூறும் "பறை" என்னும் சொல் தாளம் பற்றியதாகும். அதாவததாளத்தைக் கொட்டிக் கொடுக்கும் பல்வேறதாளக்கருவிகளின் (percussion instruments) முறைகளும் மரபுகளும் பற்றியதாகும்.

நிலத்தை ஐந்தாவகுத்துக் கொண்ட தமிழர் அந்தந்நிலத்துக்குரிய இசையை உருவாக்கினர். தொல்காப்பியர் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களுக்கும் உரிய தொழில் இசையையும, இன்ப இசையையும் தெளிவாவகுத்தவைத்துள்ளார். பண் இசைப்பதற்குரிய பொழுதையும் வரையறை செய்துள்ளார். இசை என்ற சொல் தொல்காப்பியத்தில் 24 இடங்களில் வந்துள்ளது. இவை அனைத்தும் இசைக் கலையுடன் ஒரவகையில் தொடர்பஉள்ளதாகவே அமைந்துள்ளது.

தொல்காப்பியர் குறிப்பிடும் பாட்டு, வண்ணம் ஆகிய சொற்கள் இசையோடதொடர்புடைய ஆழ்ந்பொருள் பொதிந்சொற்களாகவே அமைந்துள்ளன. பாடல்களை அவற்றின் அமைப்பு, கருத்தமற்றும் இசைத்தன்மையைக் கொண்டபாகுபாடசெய்துள்ளார். கலிப்பாவும், பரிபாடலும் இவ்வகையில் குறிப்பிடத்தகுந்தன, பரிபாட்டஎன்பதஇசைப்பா எனப் பேராசிரியர் குறிப்பிடுகிறார். பிசியைப் போன்ற இயல்புடையதாகப் பண்ணத்தி என்னும் இசைப்பாடல் இருப்பதைத் தொல்காப்பியத்தின் வழி அறியலாம். ஊடல்தீர்க்கும் வாயில்களாகத் தொல்காப்பியர் குறிப்பிடும் பாணன், கூத்தன், பாடினி, விறலி ஆகியோர் இசையிலும் கூத்திலும் திறமை உடையவர்கள் என்பதைச் சங்இலக்கியத்தின் வாயிலாஅறிய முடிகிறது.

இசைத்தூண்கள்

தமிழிசையின் மகத்துவம் நிலைத்தவாழ வேண்டும் என்றபண்டைத்தமிழ் மக்கள் நினைத்தார்கள். ஆலயங்களிலே இசைத்தூண்களை அமைத்தார்கள். அந்தத் தூண்களைத் தட்டினால் இனிமையான இசை ஒலிக்கும். மதுரை, திருநெல்வேலி, திருக்குறுங்குடி, சுசீந்திரம் ஆகிய இடங்களிலே இசைத்தூண்களிலே இன்றைக்கும் இசை எழுகின்றது. தமிழிசையின் பெருமைக்குச் சான்றாஒலிக்கின்றது.

இசைச் சிற்பங்கள்

சுசீந்திரம், தாராசுரம், திருவட்டாறு, திருவெருக்கத்தப்புலியூர், கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய ஊர்களிலே உள்ள கோவில்களில் பண்டைய இசைக்கருவிகளையும் அவற்றை வாசித்இசைக்கலைஞர்களையும் சிற்பங்களாகச் செதுக்கிவைத்துள்ளனர்.

இசைக் கல்வெட்டுகள்

குடுமியான்மலை இசைக்கல்வெட்டதமிழிசையின் சுரங்கள்பற்றிய செய்தியைத் தருகிறது. திருவாரூர், திருவையாறு, தஞ்சை ஆகிய கோயில்களிலும், திருவண்ணாமலை, திருச்செந்துறை, திருவிடைமருதூர், திருவீழிமிழலை, திருவல்லம், செங்கம், சந்திரகிரி ஆகிய ஊர்களிலும் உள்ள கல்வெட்டுக்களில் இசையைப்பற்றியும், இசைக் கலைஞர்களைப் பற்றியும் குறிக்கப்பட்டுள்ளன.

பழந்தமிழிசையில் பண்கள்

தமிழிசை 22 அலக(சுருதி) 12 தானசுரம் (Semitones) நாற்பெரும்பண், ஏழ்பெரும்பாலை(அடிப்படை இராகங்கள்) மற்றும் 82 பாலை (மேளகர்த்தா) என்ற அடிப்படையில் அமைந்தது. அரிகாம்போதி, நடன பைரவி, இருமத்திமத்தோடி, சங்கராபரணம், கரகரப்பிரியா, தோடி, கல்யாணி ஆகிய ஏழ் பெரும் இராகங்களே பழந்தமிழ் இசையில் 2000 ஆண்டுகட்கும் முன்னர் தோன்றிய ஆதி ஏழ்பெரும் இராகங்கள் ஆகும். பண்களுக்கஆதியில் யாழ் என்றும் பின்னர் பாலை என்றும் இன்றமேளகர்த்தா இராகம் என்றும் பெயரும் வழங்கி வருகின்றது. தமிழ் இசையின் சிறப்பான பாலைகளான ஏழ்பெரும் பாலைகள் முறையே,

  1. செம்பாலை (அரிகாம்போதி)
  2. படுமலைப்பாலை (நடபைரவி)
  3. செவ்வழிப்பாலை (இருமத்தி மத்தோடி)
  4. அரும்பாலை (சங்கராபரணம்)
  5. கோடிப்பாலை (கரகரப்பிரியா)
  6. விளரிப்பாலை (தோடி)
  7. மேற்செம்பாலை (கல்யாணி)

எனச் சிலம்பஅரங்கேற்றுக்காதையில் இளங்கோவடிகள் குறிப்பிட்ட வரிசை முறையை அடிப்படையாகக் கொண்டதமிழ்ப் பண்கள் இசைக்கப்பட்டன. ஆம்பல் பண், காஞ்சிப் பண், காமரம், குறிஞ்சிப் பண், செவ்வாழி பண், நைவனம், பஞ்சுரம், படுமலைப்பண், பாலைப்பண், மருதப்பண், விளரிப்பண் ஆகிய பண்கள் முழுமையாகவும் அவற்றின் பிரிவுகளாகவும் இசைக்கப்பட்டுள்ளன. பண்டைய தமிழகத்தில் பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொரஇசைகளிருந்ததா(ராகம்) சிலப்பதிகாரம் கூறுகிறது. பிங்கலந்தையில் 103 தாய்ப்பண்களும் (மேளகர்த்தா இராகங்கள்) பன்னீராயிரம் பண்களும் குறிப்பிடப்படுகின்றன.ஆபிரகாம் பண்டிதர் எழுதிய கருணாமிர்சாகரம் என்னும் நூலில் ஒவ்வொரபாலைக்கும்(இராகத்திற்கும்) பிறக்கும் பண்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.

இசைக்கருவிகள்

சங்காலத்தில் ஆண்கள், பெண்கள், மட்டுமல்லாதஇசையும் கூத்தும் வல்ல பாணர், பாடினியர், விறலியர்(ஆடல் மகளிர்) போன்றறோர் பண்ணும் தாளமும் கூடிய இசைப்பாடல்களைப் பண்ணிசைக் கருவிகள், தாளவிசைக் கருவிகள் ஆகியவற்றின் துணையோடசிறப்பாகப் பாடி உள்ளனர். யாழ், கின்னரம், குழல், சங்கு, தூம்பு, வயிர், தண்ணுமை, முழவு, முரசு, பறை, கிணை, துடி, தடாரி, பாண்டில் மற்றும் இன்னியம் முதலான இசைக்கருவிகள் இருந்துள்ளன. சிலப்பதிகாரம் அரங்கேற்றுக் காதையில் அரங்கேற்ற ஊர்வலத்தில் இடம் பெற்ற இசைக் கருவிகள் பண்டைத் தமிழரின் மறைந்தொழிந்யாழ்களான முளரி யாழ், சுருதி வீணை, பாரிசாவீணை, சதுர்தண்டி வீணை முதலானவையாகும். யாழினை 'நரம்பின் மறை'(தொல்.1:33 2-3)எனத் தொல்காப்பியரும், 'இசையோடசிவணிய யாழின் நூல்' எனக் கொங்குவேளிரும் குறிப்பிட்டுள்ளனர். கர்நாடஇசையின் பெருமையான இசைக்கருவியான வீணை, கோட்டவாத்தியம் இவைகளுக்கஇணையாகத் தமிழிசையில் சொல்லப்படும் இசைக்கருவி யாழ். வீணை பற்றிய குறிப்புகள் பல இலக்கியங்களில் காணப்பட்டாலும், யாழிசைக்கஒரசிறப்பான முதலிடம் தரப்பட்டிருந்ததை காணமுடிகிறது. வீணையைப் போன்றே யாழும் கம்பி அல்லதநரம்புகளை இழுத்துக் கட்டப்பட்டகைகளால் இசைக்கப்படும் கருவியாஇருந்திருக்கிறது. சுவாமி விபுலாநந்தாவின் “யாழ் நூலில்” யாழினைப் பற்றி பல விவரங்கள் கூறப்பட்டிருக்கின்றன. திருமறையில் சொல்லப்பட்ட மற்ற இசைக்கருவிகளான வீணை, கொக்கறை, குடமுழவமுதலியனவற்றைப் பற்றி “கல்லாடம்” நூலில் விளக்கங்கள் காணப்படுகின்றன. பன்னிரெண்டாவததிருமுறையான பெரியபுராணத்தில் மற்றொரஇசைக்கருவியான குழல் செய்வதைப் பற்றியும், இசைப்பதைப் பற்றியும் சொல்லப்படுகின்றது.

இன்றமேலைநாடுகளில் சிறப்பாநடத்தப்படும் கூட்டவாத்திய இசை அமைப்பமுறை மேனாடுகளில் செயற்படத்தொடங்கியதிற்கபல ஆயிரம் ஆண்டுகளுக்கமுன்னரே சங்காலத்தில் இசைக்கருவிகளின் கூட்டஇசையை ஆமந்திரிகை, பல்லியம் எனத் தமிழர் அழைத்தவந்தனர்.

இசைக் கலைஞர்கள்

தமிழ் இசைக்கலைஞர்கள் பொதுவாபாணர், பொருணர், கூத்தர் என அழைக்கப்பட்டனர், பாணர்,பொருணர் என்பதஆண்களையும் விறலியர், பாடினியர் என்பதபெண் கலைஞர்களையும் குறிக்கும். இவர்களில் பொருணர் என்பவர் பரணி பாடுவதிலும் நடனம் ஆடுவதிலும் வல்லவராய் இருந்தனர். பாணர் என்பவர் வாய்ப்பாட்டிலும் அதே நேரம் இசைக்கருவிகளை இசைப்பதிலும் வல்லவராய் இருந்தனர். கூத்தர் என்பவர் பாடிக்கொண்டே ஆடும் ஆடல் வல்லவராயும் இருந்தனர். இவர்கள் தங்களதநடிப்பின் மூலம் கதைக்கேற்ற உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

பொருணரின் வகை

பொருணர் மூன்றுவகையாகப் பழந்தமிழ் இலக்கியங்களில் அறியப்படுகின்றனர். அவர்களுள்

  1. ஏர்க்களம் பாடுவோர்
  2. போர்க்களம் பாடுவோர்
  3. பரணி பாடுவோர் என்பவராவர்.

இவர்களுள் உழைக்கும் மக்களுக்காகப் பாடல்களைப் பாடி மகிழ்விப்பவர்கள் ஏர்க்களம் பாடுவோர் எனவும், போர் நடக்கும் போர்க்களங்களில் மன்னர் மற்றும் படை வீரர்களுக்காஅவர்களின் ஓய்வநேரத்தின் போதபோரில் அவர்கள் பட்ட வலிகளையும் வேதனைகளையும் ஆற்றவேண்டி இசைக்கருவிகளை மீட்டிப் பாடி அவர்களை மகிழ்விப்பவர்கள் போர்க்களம் பாடுவோர் எனவும் அழைக்க்கப்படுவர். இவர்கள் தண்டகப் பறை எனும் கருவியை இசைப்பர். பரணி பாடுவோர் என்போர் விழாக்காலங்களில் தங்கள் இசைத்திறமைகளை வெளிப்படுத்துபவராவார். இவ்விழாக்களில் மன்னர்களின் போர்க்கள வெற்றிகுறித்தஅவர்களின் வீர தீரச் செயல்கள் குறித்தும் பாடப்படும். பரணி என்பதஒருவகைக் கூத்தஅல்லதநடனமாகும். எனவே பரணி பாடுவோர் ஆடலிலும் திறன் பெற்றிப்பர். மேலும் கூத்தர் என்பவர் நாட்டிய நாடவடிவில் தங்களின் கருத்துகளை வெளிப்படுத்துவர். இவர்கள் ஓரிடத்திலிருந்தமற்றோர் இடத்திற்கஇடம்பெயரும் வாழ்க்கை உடையவராவார்கள்.

பாணரின் வகை

  1. இசைப்பாணர் - வாய்ப்பாட்டபாடுபவர்கள்
  2. யாழ்ப்பாணர் - இவர்கள் யாழ் என்னும் இசைக்கருவியை மீட்டுபவர்கள். சங்இலக்கிய நூல்களான சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை என்பனவற்றில் இவர்களைப் பற்றிய பெருமளவசெய்திகளை அறியலாம்.
  3. மணடைப்பாணர் - இவர்கள் மண்டை எனப்படும் ஓட்டினை ஏந்திப் பாடி பிறரிடம் இரந்தவாழ்க்கை நடத்துபவர்களாவர்.

இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் என்பதபாணர்களின் பெயரால் வந்ததாகும்.

ஏழிசையும் சுரங்களும்

'குரலே துத்தம் கைக்கிளை உழையே

இளியே விளரி தாரம் என்றிவை எழுவகை யிசைக்கும் எய்தும் பெயரே'

தமிழிசையில் ஏழிசைச் சுரங்களாகக் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் ஆகியவற்றைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது, இசைக்குரிய எழுத்துகள் ஏழ- ச,ரி,க,ம,ப,த,நி - இதனை ஏழிசை என்பர். தமிழிசையில் இதபறவை, விலங்கினங்களின் குரல்களோடஒப்பிடப்பட்டவிளக்கப்படுகிறது. தமிழர் ஏழிசையை இயற்கை ஒலிகளோடஒப்பிட்டுப் பார்த்தனர்.

வேண்டிய வண்டும் மாண்டககிளியு

குதிரையும் யானையும் குயிலும் தேனுவும்

ஆடும் என்றிவை ஏழிசை ஓசை

தமிழிசையில் ஐந்திசை கொண்ட (Penta Tonic) பண்கள் சிறப்பான இடத்தைப் பெறுகின்றன.

'கிளை எனப்படுவ கிளக்கும் காலைக்

குரலே இளியே துத்தம் விளரி

கைக்கிளை என ஐந்தாகும் என்ப

என சிலப்பதிகாரம் உரையிற் கூறப்படும் சூத்திரத்தின் படி குரல், இளி, துத்தம், விளரி, கைக்கிளை, ச, ப, ரி, க, ம என்ற ஐந்தசுரங்கள் கிடைக்கின்றன. இந்தச் சுரங்கள் மோகனம் என்ற அழகிய பண்ணை உருவாக்குகின்றன. பழம்பெரும் நாகரிகங் கொண்ட சீன நாடஇந்ஐந்திசைப் பண்களைப் போற்றுவதோடஅந்இசையில் எள்ளளவும் மாற்ற இன்னும் உடன்படாதஇருக்கின்றது. கூங், இட்சி, சாங்;, யூ, கியோ என அவர்கள் குரல், இளி, துத்தம், விளரி, கைக்கிளையை அழைக்கின்றனர். இவற்றுள் சில சொற்கள் தமிழ்ச் சொற்களை ஒத்திருப்பதையும் காணமுடியும்.

வ. எண் ஏழிசையின் தமிழ்ப் பெயர் ஏழிசையின் வடமொழிப் பெயர் பறவை விலங்குகளின்

குரலொலி

1. குரல் சட்சம் மயிலின் ஒலி
2. துத்தம் ரிஷபம் மாட்டின் ஒலி
3. கைக்கிளை காந்தாரம் ஆட்டின் ஒலி
4. உழை மத்திமம் கிரவுஞ்சப் பறவையின் ஒலி
5. இளி பஞ்சமம் பஞ்சமம்
6. விளரி தைவதம் குதிரையின் ஒலி
7. தாரம் நிஷாதம் யானையின் ஒலி

இச்சுரங்கள் பன்னிரண்டாவிரிவடைகின்றன. அவை

  1. குரல் - சட்சம் (ஷட்ஜம்)- ச
  2. மென்துத்தம்- சுத்தரிஷபம் ரிஷபம்,- ரி1
  3. வன்துத்தம்- சதுஸ்ருதி ரிஷபம்- ரி2
  4. மென்கைக்கிளை- சாதாரண காந்தாரம்- க1
  5. வன்கைக்கிளை - அந்தர காந்தாரம் - க2
  6. மெல்- உழை சுத்மத்திமம்- ம1
  7. வல்- உழை பிரதி மத்திமம் - ம2
  8. இளி-பஞ்சமம்- ப
  9. மென் விளரி- சுத்தைவதம்- த1
  10. வன் விளரி- சதுஸ்ருதி தைவதம்- த2
  11. மென்தாரம் -கைசகி நிஷாதம்- நி1
  12. வன்தாரம் - காகலி நிஷாதம் - நி2

ஆகியனவாகும்.

சுரங்கள்

பழந்தமிழ் இசையின் ஏழசுரங்களுக்கும் கீழ்க்காணுமாறகுறியீட்டஎழுத்துக்களைப் பயன்படுத்தியுள்ளனர்:

'ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என்ற

ஏழும் ஏழிசைக் கெய்தும் அக்கரங்கள்'

குரல் - ஆ; துத்தம் - ஈ; கைக்கிளை - ஊ; உழை - ஏ; இளி - ஐ; விளரி - ஓ; தாரம் - ஔ. ஆகியன பழந்தமிழர் பயன்படுத்திய சுர ஒலிகளாகும். மேலும்ஒரசுரத்தில் நான்கில் ஒரபாகக்கூறுகளை உயிரெழுத்துமூலம் உணர்த்தும் வழக்குத் தமிழ் நாட்டில் இருந்தது. குடுமியான்மலைக் கல்வெட்டில் ஒரசுரம் நான்காகப் பகுக்கப்பட்டர, ரி, ரு, ரெ என்றவாறகுறிக்கப்பட்டுள்ளதைப் பேராசிரியர் சாம்பமூர்த்தி எடுத்துக்காட்டியுள்ளார். இந்தக் கல்வெட்டகி.பி. ஏழாம் நூற்றாண்டில் பல்லவமன்னன் மகேந்திரன் காலத்ததாகும். குடுமியான்மலைக் கல்வெட்டில் ஆ.ஈ.ஊ.ஏ (ஏழிசைக்கசமமான உயிரெழுத்துக்கள்) ரா, ரி, ரு, ரே, (ரீன் நான்கவகை கள்) கா, கி, கூ, கெ (கவின் நான்கவகைகள்) தா, தீ, தூ, தே (தவின் நான்கவகைகள்) எனும் குறிப்புக்கள் உண்டு.

சங்கால நூல்கள்

முதன்மைக் கட்டுரை: சங்கஇலக்கியங்களில் தமிழிசைக் குறிப்புகள்

இசை உணர்வின் எழுச்சியால் இசைப்பாடல்கள் தோன்றுகின்றன. சங்இலக்கியங்களான பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் பண்டைத் தமிழரின் இசைப்புலமையை வெளிப்படுத்துவனவாஅமைந்துள்ளன.

பரிபாடல்

சங்இலக்கியங்களிலே இடம்பெறுகின்ற எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடலே இப்போதகிடைக்கப்பெறுகின்ற இசை நூல்களிலேயே மிகத்தொன்மையானதாகக் கருதப்படுகின்றது. பரிபாடல்களில் மறையோர் பாடல், உழிஞை பாடல், தமிஞ்சிப் பாடல், விறற்களப் பாடல், வெறியாட்டப் பாடல், துணங்கைப் பாடல், வேதப் பாடல், வள்ளைப் பாடல் ஆகியன இசைப்பாடல்கள் என்பன அனைத்துமே இசைப்பாடல்களே என்றதெரிவிக்கின்றார் பரிமேலழகர். பாடல்களை ஆக்கிய புலவர்களின் பெயர்களும், எந்தப் பண்ணில் பாட வேண்டும் என்ற விபரங்களும், பண்ணமைத்இசையறிஞர்களின் பெயர்களும் அந்தப் பாடல்களோடகிடைக்கப்பெறுகின்றன. பரிபாடலில் உள்ள பாடல்கள், இசைப் பாடல்களாஅமைவதோடமட்டுமன்றி, பரங்குன்றம் பற்றிய செவ்வேள் பாடல்களில் இசை தோன்றுவதபற்றியும், குழல், யாழ், முழவமுதலிய இசைக்கருவிகளின் பெயர்களையும், பாணர், விறலியர் ஆகிய இசைக் கலைஞர்களுக்கான பொதுப் பெயர்களையும் குறிப்பிடுகின்றன.

இப்பாடல்களை அக்காலப் பாணர்கள் காந்தாரம், நோதிரம், செம்பாலையாகிய பண்களில் பாடியுள்ளனர். பரிபாடலின் யாப்பினைக் குறித்துத் தொல்காப்பியர் பரிபாடல் வெண்பா யாப்பினதேயெனக் குறிப்பிட்டுள்ளார். பரிபாடல், வண்ணஒத்தாழிசைக் கலிப்பா ஆகிய இருவகைப் பாடல்களுக்கும் தரவு, கொச்சகம், அராகம்அல்லதஇராகம், சுரிதகம் போன்ற ஒத்உறுப்புக்கள் உண்டு.

புற நானூறு

எட்டுத் தொகை நூல்களில் மற்றொன்றான புறநானூற்றில் குறிஞ்சிப்பண், மருதப்பண்,காஞ்சிப்பண், செல்வழிப்பண், படுமலைப்பண், விளரிப்பண் என்னும் பண்களைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. சீரியாழ், பேரியாழ், வேய்ங்குழல், ஆம்பற்குழல், முழவு, தண்ணுமை, பெருவங்கியம் முதலிய இசைக் கருவிகளைப் பற்றி விளக்கப்பட்டுள்ளது.

அகநானூறு

பெண்ணொருத்தி யாழிலே குறிஞ்சிப்பண்ணை இசைத்து, தினைப்புனத்தில் தீனிக்காவந்யானையைத் தூங்கச் செய்தாள் என்ற தகவல் அகநானூற்றில் அறியத்தரப்பட்டுள்ளது.

பதிற்றுப்பத்து

மற்றொரஎட்டுத்தொகை நூலான பதிற்றுப்பத்தின் ஒவ்வொரபாடலின் இறுதியிலும் துறை, வண்ணம், தூக்கு(இசை),பெயர் என்பன குறித்தவைக்கப்பட்டுள்ளன.

ஆற்றுப்படை நூல்கள்

பத்துப்பாட்டில் இடம்பெறும் சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை என்பவற்றில் சீறியாழ், பேரியாழ் என்னும் இசைக்கருவிகளைப் பற்றிச் சொல்லப்படுகிறது. பாணர், பாடினி, விறலியர், கூத்தர் முதலான இசைக் கலைஞர்களைப் பற்றிச் சொல்லப்படுகிறது.

மலைபடுகடாம்

மலைபடுகடாம் என்ற இலக்கியத்தில் தமிழ் இசைக்கருவிகளின் வகைகள் விளக்கப்பட்டுள்ளன. இமிழ், முழவு, ஆகுளி, பாண்டில், கோட்டு, தும்பு, இளி, இமிர், குழல், அரி, தட்டை, எல்லரி,பதலை, முதலான இசைக்கருவிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

சங்கம் மருவிய காலம்

நீதி நூல்கள் பதினெட்டும் தமிழிசையின் நுட்பத்தைச் சிறப்பாஎடுத்துரைப்பனவாஅமைந்துள்ளன. சிறந்பண்ணிசைக் கருவியான யாழைப் பற்றிக் குறிப்பிடும்போது, குழலினிதயாழினிதஎன்ப பண்ணமையா யாழின் கீழ்ப்பாடல் பெரிதின்னா என நீதி நூல்கள் குறிப்பிடுகின்றன. குழலினினியமரத் தோவை நற்கின்னா சொற்குறி கொண்டதுடிபண் உறுத்துவ போல் போன்ற பாடல் வரிகள் சங்கம் மருவிய காலத் தமிழிசைச் சிறப்பை உணர்த்துவன ஆகும்.

செவ்வழி யாழ் பாண் மகனே பாலையாழ் பாண் மகனே தூதாய்த் திரியும் பாண்மகனே போன்ற பாடல் வரிகள் இசைக் கலைஞர்களைப் பற்றிக் கூறுவதைக் காணலாம். சங்கால இசை மரபானது. சமண, பௌத்சமயங்களின் தாக்கத்தால் சங்கம் மருவிய காலத்தில் செல்வாக்கினை இழக்கத் தொடங்கியது.

காப்பிய காலம்

கி.பி.இரண்டாம் நூற்றாண்டிலிருந்தபன்னிரண்டாம் நூற்றாண்டவரையிலான காலக் கட்டத்தில் சிலப்பதிகாரம் முதல் கம்பராமாயணம் வரையில் காப்பியங்கள் பல தோன்றியுள்ளன. காப்பியங்கள் பலவும் பழந்தமிழ் இசைச் சுரங்கங்களாகவே அமைந்துள்ளன. அவற்றுள்ளும சிலப்பதிகாரம் இசைச் செய்திகளை மிகவும் அதிகமாகத் தருகிறது. அடுத்நிலையில் பெருங்கதை இசை மலிந்காப்பியமாகக் காட்சி அளிக்கிறது.

சிலப்பதிகாரம்

இளங்கோவடிகள் இயற்றிய, சிலப்பதிகாரம் தமிழ் இசையின் வளர்ச்சிக்குச் சான்றாஅமைந்துள்ள நூலாகும். சிலப்பதிகாரமும், அதன் உரையாசிரியரான அடியார்க்கநல்லார் உரையும் தமிழிசையின் மேன்மையைக் கூறி நிற்கின்றன. சிலப்பதிகாரத்தில் உள்ள இசை நுணுக்கங்களையும் மாட்சிமைகளையும் விளக்கிக் காட்டப் பல நூல்களும் உரைகளும் உதவுகின்றன. பஞ்சமரபவெண்பாக்களின் மூலமாகவும், அரும்பதவுரையாசிரியர், அடியார்க்கநல்லார் உரைகளின் மூலமாகவும் சிலப்பதிகார இசைத்தொடர்கள் விளக்கப்பட்டுள்ளன. சிலப்பதிகாரத்தில் இசைக் குறிப்புகள் நிரம்பிய பகுதிகள் - ஆய்ச்சியர் குரவை, அரங்கேற்றகாதை, கானல்வரி, வேனிற்காதை, கடலாடுகாதை, புரஞ்சேரியிருத்காதைமுதலியன .

சிலப்பதிகாரத்தின் கானல்வரிப் பகுதியில், வார்த்தல், வடித்தல், உந்தல், உறத்தல், உருட்டல், தெருட்டல், அள்ளல், பட்டடை என்றயாழை மீட்டுகின்ற எட்டுவகைத் திறன் பற்றிக் கூறப்பட்டுள்ளது. ஏழிசைபற்றியும், நான்குவகைப் பாலைகள் பற்றியும், முப்பதவகையான தோற்கருவிகளைப் பற்றியும் சிலப்பதிகாரம் கூறுகின்றது.

சிலப்பதிகாரம் தமிழிசைக் காப்பியமாகும். இசை ஆசிரியரின், தன்னுமை ஆசிரியரின் அமைதி பற்றி இளங்கோவடிகள் கூறுகிறார். தன்னுமைக் கருவியின் பயன்பாட்டுச் சிறப்பை ஆக்கல், அடக்கல், மீத்திறம் படாமை எனவும் யாழின் அமைப்பு, யாழிசை அமைப்பு, யாழாசிரியரின் திறமை முதலியனவும் கூறப்படுகின்றன. வரிப்பாடல், தெய்வம் சுட்டிய வரிப்பாடல், குடைப்பாடல் முதலியன இசையின் நுட்பத்தைப் புலப்படுத்துவன. புகாரில் இசை வல்லுநர்கள் இருந்ததை, அரும்பெறன் மரபில் பெரும்பாண் இருக்கையும் என்ற அடியாலும் வீணை இசைக் கருவி இருந்ததை, மங்களம் இழப்ப வீணை மண்மிசை என்ற அடியாலும் உணர முடிகிறது.

பக்தி இலக்கிய காலம்

தமிழர் வழிபாட்டமுறையை இசையிலிருந்தபிரிக்முடியாதஎன்பதைப் பக்தி இலக்கியங்கள் தெளிவுபடுத்துகின்றன. இன்றநமக்குக் கிடைத்திருக்கும் பதிகங்களில் பெரும்பாலானவை, சிவபாசேகரன் என்றும், திருமுறைகண்ட சோழனென்றும் போற்றப்பட்ட இராசஇராச சோழனின் பெரமுயற்சியால் சிதம்பரம் கோவிலில் பூட்டி வைக்கப்பட்ட அறையிலிருந்தஒன்பதாம் நூற்றாண்டளவில் வெளிக் கொணரப்பட்டவையே. அவற்றில் பண்ணிசை ஏதென்றஅறியாபதிகள் இருக்கக் கண்டு, அச்சோழன் யாழ்ப்பாணர் பரம்பரையில் வந்மதங்சூளாமணியார் என்னும் பெண்மணியை அழைத்துப் பண்ணினை வரையறுக்கும்படிப் பணிக்க, அவர் வரையறுத்தப் பண் வரிசையிலேயே அவைகள் இன்றும் பாடப்படுகின்றன.

பத்தபத்தாகப் பாடல்களைப் பாடும் பதிகங்கள் என்ற முறையின் முன்னோடியாகச் சொல்லப்படுபவர் காரைக்காலம்மையார் என்றபோற்றப்படும் புனிதவதியார். இவர் பாடிய பதிகங்கள் "மூத்திருப்பதிகங்கள்" என்றஅழைக்கப்படும். அம்மையார் வாழ்ந்காலம் கி.பி.5 ஆம் நூற்றாண்டாகும். இவர் தெய்வத்தைப் பண்ணிசையில் பாடி வழிகாட்டினார். இவர் பாடிய பதிகங்கள் "மூத்திருப்பதிகங்கள்" என்றஅழைக்கப்படும். அம்மையார் வாழ்ந்காலம் கி.பி.5 ஆம் நூற்றாண்டாகும். இவரைத் தொடர்ந்தசைவ சமயத்தின் நான்கதூண்களா சொல்லப்படும் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் இவர்களில் முதல் மூவர் பல பதிகங்களைத் தமிழ்ப்பண்ணிசையில் பாடியிருக்கின்றனர். தேவாரப்பண்கள் மக்களிடையே மிகப் புகழ்பெற்றமையால், இராசராச சோழன் தொடங்கி பல அரசர்கள் தமிழகத்தின் கோவில்களில் இவற்றை முறைப்படி இசையுடன் பாட ஓதுவார் என்னும் இசைக்கலைஞர்களை நியமித்தனர். இவ்வோதுவார்களின் பணி இன்றும் தமிழகக் கோவில்களில் தொடர்கிறது. சைவ நாயன்மார்களால் தமிழ் இசை முறைப்படி தேவாரப் பாடல்கள் காலந்தோறும் இசைக்கப்பட்டன. திருநீலகண்ட யாழ்ப்பாணர் வரலாறஇசைக்கருவியோடஇணைந்தஅமைந்ததஆகும். கோயில்களில் இசை வல்லார் அமர்த்தப் பெற்றிருந்ததையும், தேவாரம் ஓதப் பெற்றததையும் தஞ்சைப் பெரிய கோயில் முதலான பல கோயில் கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன. பிற்காலத்தஅருணகிரி நாதர் தம் திருப்புகழ் முழுவதாயும் பல்வேறசிவத்தலங்களில் இசைமழைப் பொழிந்தகொட்டியதை அவர்தம் திருப்புகழ் வரலாறஎடுத்துரைக்கிறது.

திருநாவுக்கரசர் அருளியத் தமிழ்ப் பதிகமான தேவாரத்தில் அதிகமாஇருபத்தோரபண்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. சிலர் இருபத்துநான்கஎன்றும், இன்னும் சிலர் இருபத்தேழஎன்றும் கூறுகின்றனர். எப்படியாயினும் தேவாரம் முழுதுமே ஒரமுறையான பண்ணிசை வரிசையில் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். ஒன்பதாவததிருமுறையில் சொல்லப்படும் “சாளராபாணி” என்னும் பண் மற்ற திருமுறைகளில் பயன்படுத்தப்படவில்லை.

கர்நாடஇசையும் தமிழிசையும்

கர்நாடஇசை- தமிழிசை ஆகிய இரண்டஇசை மரபுகளையும் ஒப்பநோக்குகையில் இன்றைய கர்நாடஇசையில் பயன்படும் இசை வழக்குகள், முந்தைய பழந்தமிழ் இசையின் வழக்குகளுக்குப் புதிதாகப் பெயரிட்டும், அதிபயன்பாட்டினால் வளர்ச்சி அடைந்தும், கால மாறுபாட்டிற்கேற்ப உருமாற்றமடைந்தும் இருக்கின்றன எனலாம்.

ஏழாம் நூற்றாண்டிலிருந்த12 ஆம் நூற்றாண்டுவரை பக்தித் தமிழ் இலக்கியங்கள் தமிழ்நாட்டில் கோலோச்சின.தமிழ்நாட்டவரலாற்றில் கி.பி. 3 ம் நுாற்றாண்டமுதல் 6ம் நுாற்றாண்டவரை களப்பிரர் ஆட்சி ஏற்பட்டது. தொடர்ந்த20 ம் நுாற்றாண்டவரை தமிழகம் மாறிமாறி பிற மொழி மன்னர் குலங்களால் தான் ஆட்சி செய்யப்பட்டவந்தது. அப்போதும் வடமொழி அதிமுக்கியத்துவம் பெற்றிருந்தது. இந்தப் பிறமொழி ஆதிக்கம் காரணமாகத் தமிழ்க்கலைகள் பல ஆதரிப்பார் இல்லாமல் அழிய நேரிட்டது. பல்லவர்கள் வடமொழிக்கும் தெலுங்குக்கும் முக்கியத்துவம் அளித்தனர். நாயக்கர் காலம் தெலுங்ககாலகட்டம். பிறகமராட்டியர் காலகட்டம். இந்தக் காலகட்டங்களில் பொதுவாகத் தமிழ்க் கலைகளுக்கஇறக்கமும் தொடர்ச்சியறுதலும் நிகழ்ந்தன. தமிழிசையின் ஆதி மும்மூர்த்திகளான அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை ஆகியோர் வளர்த்தமிழிசை புறக்கணிக்கப்பட்டது.தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதர் என்போரும் தெலுங்கமொழியிலே கீர்த்தனைகளை எழுதினார்கள். பாடகர்கள் அவற்றை மேடைகளில் பாடினார்கள். தமிழ் இசை கர்நாடஇசை என்றபெயரில் வடமொழிச் சுரங்களோடவளர்ந்தது. தமிழ்ப் பாடல்களே பாடப்படாமையால் கர்நாடஇசை தமிழிசைக்கஅந்நியமானதஎன்றமக்கள் எண்ணத் தொடங்கினர். இதனால் பழந்தமிழிசை மெல்ல மெல்ல மறையத் தொடங்கியது.

தமிழரிசையே இன்றஉழையிசையடிப்படையில் தாய்ப்பண்களையும் கிளைப்பண்களையும் வகுத்தும் பழந்தமிழ்க் குறியீடுகளையும் பண்ணுப் பெயர்களையும் வடசொல்லாமாற்றியும், 'கருநாடசங்கீதம்' எனப் பெயரிட்டவழங்கி வருகின்றது என்றவெற்றிச்செல்வனென்ற இசை ஆய்வாளர் தம்முடைய இசையியல் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

சாரங்தேவர்

சாரங்கதேவர் என்பவர் கி.பி.1210 - 1241 வரையுள்ள காலத்தில் காசுமீரத்திலிருந்ததமிழகம் வந்ததேவாரப் பண்களை அறிந்தவடமொழியில் 'சங்கீரத்னாகரம்' என்னும் நூலை எழுதினார். அந்நூலில் உள்ள இசையமைப்பமுறை தேவாரம், திவ்விய பிரபந்தத்தில் உள்ள தமிழிசைப் பண்ணமைப்பமுறையை ஆதாரமாகக் கொண்டது. வடமொழிப் பெயர்கள் இராகங்களுக்கஇடப்பட்டு, முதல்முதல் வெளிவந்கர்நாடஇசைநூல், கர்நாடஇசைக்கமுதல்நூல் அதுதான் என்றஅறியப்படுகின்றது. சங்கீரத்னாகரத்தின் வாயிலாகத் தமிழிசை வடநாடுகளுக்கஅறிமுகமானதாகக் கூறலாம். இசை நூல்களில் வடமொழிப்பெயர்கள் இடம்பெறத் தொடங்கின. சில ராகங்களுக்குச் சாரங்தேவர் 'பாஷா ராகங்கள் ' என்றபெயரிட்டுள்ளார். பாஷா என்றஅவர் கூறவததமிழ் மொழியையேயாகும்.

இந்துஸ்தானி இசை

கி.பி. பதின் மூன்றாம் நூற்றாண்டுவரை தென்னிந்திய இசையென அழைக்கப்பட்ட தமிழிசை மட்டுமே இந்தியா முழுவதும் பரவி வாழ்ந்திருந்தது. தென்னிந்தியாவில் வளர்ந்தநின்ற தமிழிசை வட இந்தியாவெங்கும் பரவி மாறுபட்ட பெயர்களோடவழங்கிவந்தாலும்கூட, காலப்போக்கில் முஸ்லிம் அரசர்கள் இந்தியாவை ஆட்சிசெய்யத் தொடங்கிய காலம் தொடக்கம் முஸ்லிம் நாடுகளின் இசையின் வரவால் தனித்துவம் இழந்தது. இரண்டறக் கலந்தது. அதுவே இந்துஸ்தானி இசை என்றஇப்போதவழக்கத்தில் உள்ளது. பிற நாட்டஇசைக்கலப்பால் புதுவடிவம்பெற்ற வட இந்திய இசையே இந்துஸ்தானி இசை. ஆனால் அடிப்படை மரபமாறாமல் இன்றும் கடைப் பிடிக்கப்பட்டவருவததென்னிந்திய இசை. அது��ே கர்நாடஇசை என்ற பெயரில் வழங்கிவரும் தமிழிசை.

14 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஹரிபாலர் என்பவர் எழுதிய 'சங்கீசுதாகரம்' என்ற நூலிலேயே முதன்முதலாக, கர்நாடகஇசை, இந்துஸ்தானிஇசை என்ற இரண்டுவகை இசைகளின் பெயர்கள் குறிப்படப்பட்டுள்ளன. கன்னடம் தனியொரமொழியாகத் தோன்றி 1100 ஆண்டுகளே ஆகின்றன. தெலுங்கமொழி தோன்றி 900 ஆண்டுகளே ஆகின்றன.ஆனால் இற்றைக்க1300 ஆண்டுகளுக்கமுன்னரே பக்தி இலக்கியங்களான தித்திக்கும் தேவாரங்கள் தோன்றிவிட்டன. 2000 ஆண்டுகளுக்கமுன்பே தமிழிசை செழித்ததழைத்தஓங்கி நின்றதஎன்பதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் சான்றபகர்கின்றன.

Classical Ragas In Tamil Film Songs

Select Ragas






கர்நாடக சங்கீதம்

வரலாற்று பின்னணி

தமிழகத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகும். செம்மொழியில் ஏழிசை என: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி மற்றும் தாரம் என அழைக்கப்பட்டதையே தமிழ்மொழியில் வடமொழிக் கலப்பு ஏற்பட்டபோது இந்த ஏழு இசைகளை ‘சுரம்’ என்றனர்.

தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் என்னும் மூவரும் கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் எனக் கருதப்படுகிறார்கள். இவர்கள் இயற்றிய ஆயிரக்கணக்கான பாடல்கள் இன்றுவரை கர்நாடக இசையின் உயிர் நாடியாக உள்ளன. இம்மூவருக்கும் முன்னர் ஆதி மும்மூர்த்திகள் என முத்துத் தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்துப் பிள்ளை என்னும் முப்பெரும் இசை அறிஞர்கள் சீர்காழியில் வாழ்ந்து கருநாடக இசையை செப்பமுற வளர்த்தனர். இவர்கள் தியாகராஜ சுவாமிகள் போன்றோருக்கு வழிகாட்டிய முன்னோடிகள். ஆதி மும்மூர்த்திகள் பாடிய இசைப்பாடல்கள் புகழ்பெற்ற தமிழ்ப்பாடல்கள்.

கருநாடக இசை இராகம், தாளம் என்னுமிரண்டையும் அடிப்படையாகக் கொண்டது. இராகங்கள் சுரங்களை அடிப்படையாகக் கொண்டன. ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்ற இவ்வேழு சுரங்களும் ச - ரி - க - ம - ப - த - நி என்னும் எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன. இவற்றுள் மத்திமத்துக்கு இரண்டு வேறுபாடுகள் உண்டு. ரிஷபம், காந்தாரம், தைவதம், நிஷாதம் என்ற நான்கு சுரங்களுக்கும் மும்மூன்று வேறுபாடுகளுடன் 16 சுர வேறுபாடுகள் உள்ளன. இந்த ஏழு சுரங்களிலும், முற்கூறிய வேறுபாடுகளுள்ள சுரங்களுள் ஒன்றையோ, பலவற்றையோ மாற்றுவதன் மூலம், ஏழு சுரங்களைக்கொண்ட 72 வெவ்வேறு சுர அமைப்புக்களைப் பெற முடியும். இவ்வாறு உருவாகும் இராகங்கள் மேளகர்த்தா இராகங்கள் எனப்படுகின்றன. இவையே கர்நாடக இசைக்கு அடிப்படையாக அமைகின்றன. இந்த ஒவ்வொரு மேளகர்த்தா இராகத்துக்குமுரிய சுரங்களில் ஒன்றையோ, பலவற்றையோ குறைப்பதன் மூலம் ஏராளமான இராகங்கள் பெறப்படுகின்றன.

நாதம்

செவிக்கு இனிமை கொடுக்கும் த்வனி நாதம் எனப்படும். சங்கீதத்தில் மூலாதாரமாக விளங்குவது நாதம் ஆகும். ஒழுங்கான முறையில் எழுப்பப்படும் ஒலி நாதம் எனப்படுகிறது. ஒழுங்கற்ற முறையில் எழுப்பப்படும் ஒலி இரைச்சல் எனப்படுகிறது. நாதத்திலிருந்து சுருதியும், சுருதியிலிருந்து ஸ்வரமும், ஸ்வரத்திலிருந்து இராகமும் உண்டாகிறது. நாதத்தில் இரு வகை உண்டு அவையாவன;

1. ஆகதநாதம் - மனித முயற்சியினால் உண்டாக்கப்படும் நாதம் ஆகத நாதம் எனப்படும்.

2. அநாகதநாதம் - மனித முயற்சி இல்லாமல் இயற்கையாக உண்டாகும் நாதம் அநாகத நாதம் எனப்படும்.

சுருதி

பாட்டைத் தொடங்குவதற்கு அடிப்படையாக உள்ள விசேட ஒலியே சுருதி எனப்படும். இதுவே இசைக்கு ஆதாரமானது. இது கேள்வி என்றும், அலகு என்றும் அழைக்கப்படும்.நாதத்திலிருந்து சுருதி உற்பத்தியாகிறது. சுத்தமாக இசைக்கப்படும் சங்கீதம் அதாவது சுருதி தான் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். சுருதி சங்கீதத்திற்கு மிகப் பிரதானம் என்பதால் சுருதி மாதா என அழைக்கப்படும். சுருதி இரண்டு வகைப்படும், அவையாவன...

1. பஞ்சம சுருதி - மத்திமஸ்தாயி ஸட்ஜத்தை ஆதாரமாகக் கொண்டு பாடப்படுவது பஞ்சம சுருதி எனப்படும். ஸபஸ் எனப் பாடுவது.

2. மத்திம சுருதி - மத்திமஸ்தாயி மத்திமத்தை ஆதாரமாகக் கொண்டு பாடப்படுவது மத்திம சுருதி எனப்படும். ஸமஸ் எனப் பாடுவது.

சாதாரண உருப்படிகள் யாவும் பஞ்சம சுருதியிலேயே பாடப்படுகிறது. நிஷாதாந்திய, தைவதாந்திய, பஞ்சமாந்திய இராகங்களில் அமைந்த பாடல்கள் மத்திம சுருதியில் பாடப்படுகின்றன.அனேகமான நாட்டார் பாடல்கள் மத்திம சுருதியில் தான் பாடப்படுகிறது. சுருதி சேர்க்கப்படும் ஸ்வரங்கள் ஸபஸ் (ஸா பாஸாபாஸா).

ஸ்வரம்

இயற்கையாக ரஞ்சனையை, (இனிமையைக்) கொடுக்கும் தொனி ஸ்வரம் எனப்படும். சங்கீதத்திற்கு ஆதாரமான ஸ்வரங்கள் ஏழு ஆகும். இவை சப்த ஸ்வரங்கள் எனப்படும். தமிழிசையில் ஸ்வரத்திற்கு கோவை எனப் பெயர் உண்டு. ஏழு ஸ்வரங்களும் அவற்றின் பெயர்களும் தமிழ்ப் பெயர்களும் பின்வருமாறு அமையும்.

சப்த ஸ்வரங்கள் வடமொழிப் பெயர்கள் தமிழ் பெயர்கள்
ஷட்ஜம் குரல்
ரி ரிஷபம் துத்தம்
காந்தாரம் கைக்கிளை
மத்யமம் உழை
பஞ்சமம் இளி
தைவதம் விளரி
நி நிஷாதம் தாரம்

தாளம்

கையினாலாவது கருவியினாலாவது தட்டுதல் தாளம் எனப்படும். இது பாட்டை ஒரே சீராக நடத்திச்செல்கிறது. இது எமக்குத் தந்தை போன்றது. அதனால் தான் இசையில் சுருதி மாதா எனவும் லயம் பிதா எனவும் அழைக்கப்படுகிறது. லகு, துருதம், அனுதுருதம் என மூன்று அங்கங்களாக விரிவு பெறுகிறது.

தாளங்கள் கர்நாடக இசையில் கால அளவுக்கு அடிப்படையாக அமைகின்றன. ஏழு அடிப்படையான தாளங்களும், அவற்றிலிருந்து உருவாகும் நூற்றுக்கு மேற்பட்ட தாளங்களும் உள்ளன.

லயம்

பாட்டின் வேகத்தை ஒரே சீராகக் கொண்டு செல்வது லயம் எனப்படும். சுருதி இல்லாமல் பாட்டு எப்படி மதிப்பில்லையோ அதே போல் லயம் இல்லாத பாட்டிற்கும் மதிப்பில்லை எனவே இது பிதா எனப்படுகிறது. லயம் மூன்று வகைப்படும்.அவையாவன,

1. விளம்பித லயம்

2. மத்திம லயம்

3. துரித லயம்

ஆவர்த்தம்

ஒரு தாளத்தில் அங்கங்கள் முழுவதையும் ஒரு முறை போட்டு முடிப்பது ஓர் ஆவர்த்தம் எனப்படும். இது ஆவர்த்தனம், தாளவட்டம் என்றும் அழைக்கப்படும். இதன் குறியீடு // உதாரணமாக ஆதி தாளத்தை எடுத்துக்கொண்டால் ஒரு லகுவையும் 2 துருதங்களையும் போட்டு முடித்தால் ஒரு ஆவர்த்தனம் எனப்படும்.

கர்நாடக இசைக் கருவிகளின் பட்டியல்

நரம்பு வாத்தியங்கள்

யாழ்

யாழ் என்பது பண்டைய இசைக்கருவிகளில் மிகச் சிறப்பு வாய்ந்தது ஆகும். யாழ் என்பதற்கு நரம்புகளால் யாக்கப்பட்டது அல்லது கட்டப்பட்டது என்பது பொருள். பொதுவாக இசையைத் தோற்றுவிக்கும் கருவிகளைத் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, மிடற்றுக் கருவி என்று வகைப்படுத்துவர். இவற்றில் நரம்புக்கருவியாகிய யாழே, தமிழர் வாசித்த முதல் இசைக் கருவியாகும். நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்குக் காரணமான ஆதி கருவி யாழ். இக்கருவி முற்றிலுமாக மறைந்து அதன் வழிவந்த வீணை இன்று நரம்பிசைக் கருவிகளில் முதன்மையிடம் வகிக்கிறது. யாழ் கேள்வி என்ற பெயரையும் கொண்டுள்ளது.

யாழின் வரலாறு

குறிஞ்சி நிலத்தில் பயன்பாட்டில் இருந்த கருவிகளில் ஒன்று வில். வில்லில் முறுக்கேற்றிக் கட்டப்பெற்ற நாணிலிருந்து அம்பு செல்லும்பொழுது தோன்றிய இசையே யாழின் உருவாக்கத்திற்கு தோற்றுவாயாக இருக்க வேண்டும். இந்த வில்லே வில்யாழாக மலர்ந்தது. பதிற்றுப்பத்து, வில்யாழ் முல்லை நிலத்திலேயே முதலில் தோன்றியது என்று கூறினாலும், குறிஞ்சி நிலத்தில் தோன்றியது என்பதே பொருத்தமுடையது. ஏனெனில் குறிஞ்சி நிலத்தில் தான் வேட்டைத் தொழில் மிகுதியாக நடைபெற்றது. இந்த வில்யாழ் மனிதனின் முயற்சியால், உழைப்பால் பல்வகை யாழாக மலர்ந்தது.

யாழின் வடிவத்தைத் துல்லியமாக அறியப் போதிய சிற்பங்களோ, ஓவியங்களோ இன்று நம்மிடம் இல்லை. சங்க இலக்கியங்களான புறநானூறு, கலித்தொகை, பரிபாடல் மற்றும் ஆற்றுப்படை நூல்களிலும், திருக்குறளிலும் சிலப்பதிகாரம், பெருங்கதை, சீவகசிந்தாமணி முதலிய காப்பியங்களிலும் பக்தியிலக்கியங்களிலும் யாழ் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ன. என்றாலும் யாழின் வகைகளைப் பேரியாழ், சீறியாழ், மகரயாழ், சகோடயாழ் என்று அறிய முடிகிறதே ஒழிய அதன் வடிவினை அறிய முடியவில்லை.

பல்லவர் காலக் கோயிலான காஞ்சி கைலாசநாதர் கோயில் (இராஜசிம்மன் மற்றும் சோழர் காலக் கோயில்களான பொன்செய் நல்துணையீஸ்வரம் கோயில் (பராந்தகன்), திருமங்கலம் கோயில் (உத்தம சோழன்) ஆகியவற்றில் யாழ்ச் சிற்பங்கள் காணப்படுகின்றன

வீணை

வீணை ஒரு நரம்பு இசைக்கருவி. மிக அழகிய இசைக்கருவியான இது மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்திய இசையின் பல நுட்பங்களையும், தத்துவங்களையும் இந்தக் கருவியின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தலாம்.

வீணையின் வரலாறு

பண்டைக்காலம் தொட்டு வீணை வாசிக்கப்பட்டு வந்தாலும், கி.பி. 17-நூற்றாண்டில்தான் அது தற்போதைய உருவத்தை அடைந்தது. தஞ்சையை ஆண்ட ரகுநாதர் மன்னரின் காலத்தில் இது நிகழ்ந்தது.

வீணையின் பாகங்கள்

குடம், மேற்பலகை, தண்டி, மாடச்சட்டம், சுரைக்காய், பிரடைகள், யாழிமுகம், மேளச்சட்டம், மெழுகுச்சட்டம், 24 மெட்டுக்கள், குதிரைகள், லங்கர், நாகபாசம் ஆகியவை வீணையின் பாகங்களாகும்.

வீணையின் அமைப்பு

வீணை மீட்டு கருவிகளின் வகையைச் சேர்ந்தது. வீணையில் 3-1/2 ஸ்தாயிகள் வாசிக்கலாம். 4 தந்திகள் வாசிப்பதற்கும், 3 தந்திகள் சுருதிக்காகவும் தாளத்திற்காகவும் அமைந்துள்ளன. பலா மரத்தினால் வீணை செய்யப்படுகின்றது.

தண்டியின் ஒரு பக்கத்தில் குடமும், மற்றொரு பக்கத்தில் யாளி முகமும் இணைக்கப்பட்டிருக்கும். தண்டி, குடப்பக்கத்தில் சற்றுப் பருத்தும், யாளி முனைப் பக்கத்தில் சற்றுச் சிறுத்தும் இருக்கும். தண்டியின் இரு பக்கங்களிலும் மெழுகுச் சட்டங்கள் உண்டு. அவைகளின் மேல் 2 ஸ்தாயிகளைத் தழுவிய 24 மெட்டுக்கள் மெழுகினாற் செய்யப்பட்டிருக்கும்.

யாளி முகத்திற்கு அருகிலிருக்கும் சுரைக்காய் ஒரு தாங்கியாகவும், ஒலிபெருக்கும் சாதனமாகவும் பயன்படுகின்றது. 4 வாசிப்புத் தந்திகள் லங்கர்களின் நுனியிலுள்ள வளையங்களில் முடியப்பட்டு, குதிரையின் மேலும், மெட்டுக்களின் மேலும் சென்று பிரடைகளில் பிணைக்கப்பட்டிருக்கும்.

நாகபாசத்தில் சுற்றப்பட்டிருக்கும் லங்கர்களின் மேல் உள்ள சிறுவளையங்கள் சுருதியைச் செம்மையாக சேர்ப்பதற்குப் பயன்படும். வளையங்களி நாகபாசப் பக்கமாகத் தள்ளினால் சுருதி அதிகரிக்கும். யாளியின் பக்கம் தள்ளினால் சுருதி குறைவடையும். மேலும், பிரடைகளை யாளி முகப்பக்கம் தள்ளினால் சுருதி குறைவடையும்.

தஞ்சாவூர் வீணையில் குடத்தின் வெளிப்புறத்தில் 24 நாபுக்கள் கீறப்பட்டிருக்கும். ஒரே மரத்துண்டிலிருந்து தண்டியும் குடமும் குடைந்து செய்யப்பட்டுள்ள வீணைக்கு ஏகாந்த வீணை' என்று பெயர். வீணை குடத்தின் மேல் பலவகைகளில் பல ஒலித்துளைகள் வட்டவடிவமாகப் போடப்படிருக்கும்.

தம்புரா

தம்புரா சுருதி கருவிகளில் மிகச்சிறப்பானது. இது தம்பூரா, தம்பூரி, தம்பூரு, தம்பூர் என்றும் அழைக்கப்படுகின்றது. நன்கு சுருதி சேர்ந்துள்ள தம்புராவை மீட்டுவதால் மனதை ஒன்றுபடுத்தி இறை தியானத்தில் ஈடுபடுவோரும் உண்டு. அரங்கிசையில் மேளக்கட்டு ஏற்படவும் இது உதவுகிறது.

சுருதிக்குப் பயன்படும் கருவிகள்

சுருதிக்குப் பயன்படும் கருவிகளுள் தலைசிறந்தது தம்பூரா ஆகும். இன்று இலத்திரனியல் சுருதிப்பெட்டியும் அரங்கிசையில் இடம்பெற ஆரம்பித்துள்ளது.

சுருதி பெயர் ஸ்வரம் விகிதாச்சாரம் சுருதி அதிர்வெண்
க்ஷோபீனி ஷட்ஜா 1 466.1638
திவ்ற கோமல் ரிஷப் 256/243 491.1026
கும்தாவதி 16/15 497.2414
மண்ட 10/9 517.9598
சந்தோவதி ஷுத்த ரிஷப் 9/8 524.4343
தயாவந்தி கோமல் கந்தர் 32/27 552.4904
ரஞ்சனி 6/5 559.3966
ரக்திகா 5/4 582.7048
ருத்ரி ஷுத்த கந்தர் 81/64 589.9886
குரோதி ஷுத்த மத்யம் 4/3 621.5517
வஜ்ரிக 27/20 629.3211
பிரசரிணி திவ்ற மத்யம் 45/32 655.5428
ப்ரிதி 729/512 663.7371
மர்ஜானி பஞ்சம் 3/2 699.2457
க்ஷிதி கோமல் தைவத் 128/81 736.6539
ரக்த 8/5 745.8621
சண்டிபிணி 5/3 776.9397
அளபினி ஷுத்த தைவத் 27/16 786.6514
மட்னி கோமல் நிஷாத் 16/9 828.7356
ரோகினி 9/5 839.0948
ரம்யா 15/8 874.0571
உக்ர ஷுத்த நிஷாத் 243/128 884.9828
க்ஷோபீனி ஷட்ஜா 2 932.3276

வயலின்

வயலின் வயலின் (பிடில்) என்ற இசைக்கருவி, வில் போட்டு வாசிக்கப்படும் மரத்தினாலான தந்திக் கருவியாகும். இது பழங்காலத்தில் பிடில் (fiddle) என்றும் வழங்கப்பட்டது. இது மேலைத்தேயம், கீழைத்தேயம் என இரு பிராந்திய இசை வகைகளிலும் வாசிக்கப்படக்கூடிய ஒரே ஒரு வாத்தியக்கருவி ஆகும். இது பிரதான வாத்தியமாகவும் பக்கவாத்தியமாகவும் வாசிக்கப்படுகின்றது. இது நான்கு தந்திகளைக் கொண்டுள்ளது. இத்தந்திகளின் மேல் வில் ஒன்றைக் குறுக்காக செலுத்துவதன் மூலம் வயலின் வாசிக்கப்படுகின்ரது. எனினும், ஒரு சில வேளைகளில் விரல்களினால் அழுத்தப்படும் இவை வாசிக்கப்படுகின்றன. இவை சங்கீதத்தில் மிக முக்கியமானவை ஆகும். அத்துடன், பல வகையான சங்கீத வகைகளை வயலின் மூலம் வாசிக்கலாம்.

வயலினின் வரலாறு

இக்காலத்தில் நாம் பயன்படுத்தும் வயலின் ஐரோப்பியர்களால் 16ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. ஸ்ட்ராடிவேரியஸ் (Stradivarius) என்னும் இத்தாலியர் இதனை உருவாக்கினார். இத்தாலியில், பதினாராம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த கருவி கண்டுப்பிடிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். இது ரெபெக் (Rebec) எனப்படும் ஒரு பழம்பெறும் இசைக்கருவியில் இருந்து மறுவியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. வயலினை பற்றிய குறிப்பும் அதை வாசிக்க தேவையான வழிமுறைகளும் "Epitome Musical” எனப்படும் ஒரு இசை கையேட்டில் 1556-லேயே குறிப்பிடப்பட்டுள்ளது.[1] அந்த நேரத்தில் வயலின் இசைக்கருவியின் புகழ் இத்தாலியில் இருந்து ஐரோப்பா கண்டம் முழுவதிலும் பரவி இருந்தது . ரோட்டில் வசிக்கும் சாதாரண இசைக்கலைஞரில் இருந்து மன்னரின் சபையில் வாசிக்கும் வித்துவான்கள் வரை எல்லோரின் கையிலும் வயலின் இடம் பெற்றிருந்தது. வரலாற்று குறிப்புகளில் கூட பிரென்சு மன்னன் ஒன்பதாவது சார்லஸ் 1560-இல் 24 வயலின்கள் செயவதற்கு ஆணையிட்டதாக உள்ளது. பதினெட்டாம் நூற்றாண்டில் தான் வயலினின் வடிவமைப்பில் பல மாறுதல்கள் ஏற்பட்டன. [2] வயலினின் கழுத்துப்பகுதி நீட்டமாகவும், அதன் கோணத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. இன்றளவிலும் இந்த கால நேரத்தில் செய்யப்பட்ட வயலின்கள்தான் கலைக்கூடங்களிலிலும் ,கலை பொருட்கள் சேகரிப்பாளர்களிடமும் பெரும் மதிப்பை பெற்றவையாக இருக்கின்றன. நம் இந்தியாவில் இந்த இசைக்கருவி பாலுச்சாமி தீஷிதர் என்பவரால் தென்னிந்திய இசைத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது .

கருநாடக இசையில் வயலின்

தென்னிந்திய இசை முறைமையான கருநாடக இசையில், வயலின் தற்போது முக்கியமான கருவியாகப் பயன்படுகின்றது. இங்கு இது பாலசுவாமி தீட்சிதர் (1786 - 1858) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டதாக நம்பப்படுகின்றது. இவர் 1824 இல் எட்டயபுரம் சமஸ்தான வித்துவானாக இருந்தவர். கர்நாடக இசைக்கருவிகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று பண்ணிசைக் கருவிகள் (melodic instruments). மற்றொன்று தாளக் கருவிகள் (percussion instruments). ஆகும். குரலுக்கு இணையாக இராகங்களையும், மெட்டுகளையும் (tunes) இசைக்கக்கூடிய கருவிகள் பண்ணிசைக் கருவிகள், புல்லாங்குழல், நாகசுரம், வீணை, வயலின் ஆகியவை பண்ணிசைக் கருவிகள். மண்டலின், கிளாரினெட், சக்ஸோபோன் ஆகிய மேலைநாட்டுக் கருவிகளும் தற்காலத்தில் கருநாடக இசையைத் தருகின்றன. தாளத்தின் நுட்பங்களை இசை, லய நயத்துடன் வாசிக்கும் கருவிகள் தாளக்கருவிகள். கருநாடக இசையில் முதன்மையான தாளக் கருவி மிருதங்கம். தவில் என்னும் கருவி நாகசுர இசையோடு இணைந்த ஒரு தாளக் கருவியாகும். வயலின் ஒரு நரம்புக் கருவி (stringed instrument). மேலைநாட்டு இசைக்கருவி. கி.பி. 19 ஆம் நூற்றாண்டிலிருந்து கருநாடக இசையில் வயலின் ஒரு இன்றியமையாத கருவியாக உள்ளது. குரலிசைக்கு ஒப்ப எல்லா இசை நுணுக்கங்களையும் வயலினில் இசைக்கலாம். கர்நாடக இசையில் தனி நிகழ்ச்சி நிலையில் (solo concert) நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பக்க இசை நிலையிலும் (accompanying instrument) இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ளது .

வயலினின் கட்டமைப்பும் இயங்கும் விதமும்

வயலின் பல அளவுகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. வயலினின் முக்கியப்பகுதி மேபில் (maple) எனப்படும் மரத்தால் செய்யப்படுகிறது. அதற்கு மேல் கழுத்து போல் ஒர் அமைப்பு

பொருத்தப்பட்டிருக்கும். அதன் முன்பகுதி கருங்காலி மரத்தால் (ebony) செய்யப்படுகிறது. அந்த மரத்தின் கடினமான அமைப்பும், சுலபமாக தேய்ந்து போகாத திறனுமே இந்த பகுதி செய்ய உபயோகப்படுத்தப்படுவதற்கு காரணம். இந்த பகுதியில்தான் கலைஞர்கள் தன் விரல்களை தந்தியின் மீது அழுத்தி வித விதமான ஓசைகளை எழுப்புவார்கள். இந்த கழுத்துபகுதியின் மற்றொரு விளிம்பில் தந்திகளின் அழுத்தத்தை கூட்ட குறைக்க குமிழ்கள் பொருத்தப்பட்டிருக்கும். வயலினின் எல்லா பகுதியும் ஒருவித கோந்து பொருளால் ஒட்டப்பட்டிருக்கும். வயலினின் மேல் பகுதியில் தந்திகளை நன்றாக இழுத்து பிடித்த படியான அமைப்பு இருக்கும் இதில் தந்திகளின் அழுத்தத்தை லேசாக சரி செய்து கொள்ளலாம். அதற்கு நடுவில் தந்திகளை தாங்கி பிடிக்க பாலம் என்ற ஒரு அமைப்பும் உண்டு. மேல் பகுதியில் தாடையை தாங்கி கொள்வதற்கான ஒரு பகுதியை (chin rest) வேண்டிபவர்கள் பொருத்திக்கொள்ளலாம். சிலர் வாசிக்கும் போது வேர்வை படாமல் இருக்க வயலினின் மேல் பகுதியில் துண்டு ஒன்றை போட்டு அதற்கு மேல் தன் தாடையை வைத்துக்கொள்வார்கள். வயலினில் உபயோகிக்கப்படும் நான்கு வெவேறு தடிமனான தந்திகள் முன்னொரு காலத்தில் ஆட்டின் உடலில் இருந்து தயாரிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது,இப்பொழுதெல்லாம் எஃகு கொண்டு உருவாக்கப்படுகிறது.தந்திகள் அவ்வப்போது அறுந்துவிடும் என்பதால் கலைஞர்கள் தங்களுடன் எப்போழுதும் உபரியாக சில தந்திகளை எடுத்து செல்வார்கள். வயலினின் இன்னொரு முக்கியமான பகுதி "போ"(bow) எனப்படும் வில். இதை கொண்டு தந்திகளை தேய்த்த வாரே விரல்களால் அழுத்தத்தை கூட்டி குறைத்து இசை உருவாக்கப்படுகிறது. சராசரியாக ஒரு வில் 29 இன்ச்கள் அல்லது (74.5 cms) வரை நீலம் இருக்கும். இந்த குச்சியின் ஊடே ஒருவிதமான பட்டை காணப்படும். இது வெள்ளை அல்லது சாம்பல் நிற ஆண் குதிரையின் வாலில் உள்ள முடியினால் செய்யப்படுகிறது. வில்லின் ஒரு முனையில் இந்த முடிக்கற்றை ஒட்டப்பட்டிருக்கும்,மறு முனையில் அதன் இறுக்கத்தை மாற்றிக்கொள்ள குமிழ்கள் உண்டு.

கோட்டு வாத்தியம்

கோட்டு வாத்தியம் (மற்ற பெயர்கள்: சித்திரவீணை அல்லது மகாநாடகவீணை) என்னும் இசைக்கருவி வீணையைப் போன்ற ஒரு நரம்புக் கருவியாகும். ஆனால் வீணையில் உள்ள மெட்டுகளும், மெழுகுச் சட்டமும் இக்கருவியில் இருக்காது. கோடு என்றால் மரக்குச்சி என்று பொருள். மரக்குச்சி அல்லது மரத்துண்டு ஒன்றால் வாசிக்கப்பட்ட கருவி கோட்டு வாத்தியம் ஆகும். இதற்கு மகாநாடக வீணை என்றும் பெயர். கிட்டத்தட்ட 4 நூற்றாண்டுகளுக்கு முன்னர் இது தென்னிந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.

காற்று வாத்தியங்கள்

புல்லாங்குழல்

புல்லாங்குழல் மிகவும் தொன்மையான வரலாற்றையுடைய ஒரு இசைக்கருவி. உலகின் எல்லாப் பாகங்களிலும் காணப்படும் இது துளைக்கருவி (aero phones) வகையைச் சேர்ந்தது. புல்லாங்குழல்கள் மிகப் பழங்கால இசைக்கருவியாகும். இவற்றில் கையினால்-துளையிடப்பட்ட துளைகள் கொண்ட பழங்கால புல்லாங்குழல்கள் கிடைத்துள்ளன. சுமார் 43,000 முதல் 35,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் வரையான பல புல்லாங்குழல்கள் இன்றைய ஜெர்மனியின் ஸ்வாபியன் ஜுரா பகுதியில் கிடைத்துள்ளன. இந்தப் புல்லாங்குழல்கள் ஐரோப்பாவில் நவீன கால மனிதனுக்கு முந்தைய காலத்தில் இருந்தே வளர்ந்துள்ள ஒரு இசை பாரம்பரியத்தின் சாட்சியாக உள்ளது. புல்லாங்குழல்களில் புகழ்பெற்ற பன்சூரி உட்பட குழல்கள், கி.மு. 1500 முதல் இந்திய பாரம்பரிய இசையில் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. இந்து சமயத்தின் ஒரு முதன்மைக் கடவுளான கண்ணன் புல்லாங்குழலைக் கொண்டிருப்பார்.

வரலாறு

இதுவரையான காலக்கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புல்லாங்குழலில் பழமையான புல்லாங்குழலானது, ஒரு இளம் குகைக் கரடியின் தொடை எலும்பால் ஆனதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதில் இரண்டு முதல் நான்கு துளைகள்வரை இருந்திருக்கலாம், இது சுலோவியாவின் டிஜீ பேபே பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. மேலும் இது சுமார் 43,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இருப்பினும், இது சர்ச்சைக்குரியதாக உள்ளது. 2008 ஆம் ஆண்டில் குறைந்தது 35,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மற்றொரு புல்லாங்குழல் மீண்டும் ஜெர்மனியின் உல்ம் நகருக்கு அருகில் உள்ள, ஹோஹெல் ஃபெல்ஸ் குகையில் காண்டெடுக்கப்பட்டது. இந்தப் புல்லாங்குழலானது ஐந்து துளைகளுடன் V- வடிவ வாயைக் கொண்டதாக உள்ளது. இது ஒரு பிணந்தின்னிக் கழுகின் இறக்கை எலும்பில் செய்யப்பட்டதாகும். இந்தக் கண்டுபிடிப்பில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்கள் 2009 ஆகத்தில் நேச்சர் பத்திரிக்கையில் தங்கள் கண்டுபிடிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். இந்த கண்டுபிடிப்பானது, உலக வரலாற்றில் கண்டுபிடிக்கப்பட்ட எந்தவொரு இசைக் கருவியையும்விட பழமையானதாகும், ஜெர்மனியின் ஜியாசென்ஸ்கொஸ்டெர்லேர் குகையில் காண்டெடுக்கப்பட்ட புல்லாங்குழல்கள் வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்தின அவை 42,000 முதல் 43,000 ஆண்டுகள் வரை பழமையான காலக்கட்டத்தவையாக கருதப்பட்டன.

அமைப்பு

புல்லாங்குழல், புல் இன வகையான மூங்கில் "மரத்தினால்" செய்யப்படுகின்றது. இதனால் இதற்குப் புல்லாங்குழல் என்று பெயர் ஏற்பட்டது. இளமையும் மூப்புமின்றி நடுவளர்ச்சியுடைய மூங்கில் மரத்தை வெட்டி நிழலிலே ஒராண்டு காலம் வைத்து அதிலிருந்து குழல் செய்வர். சீரான விட்டமுடைய ஒடுங்கிய மூங்கில் குழாயில், வாயினால் ஊதிச் இசையொலி எழுப்புவதற்காக நுனியில் ஒரு துளையும், விரல்களால் மூடித்திறப்பதன் மூலம் இவ் இசையொலியை வெவ்வேறு சுரங்களாக மாற்றி எழுப்ப உதவும் குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய பல்வேறு துளைகளையும் கொண்ட எளிமையான கருவியாக இது இருப்பதால், சமுதாயத்தின் எல்லாத் தரப்பிலுள்ளவர்களுக்கும் இலகுவில் கிடைக்கக்கூடியதாக இருக்கும் கருவி

புல்லாங்குழலின் நீளம் 15 அங்குலம்; சுற்றளவு 3 அங்குலம். இடப்பக்கம் மூடப்பட்டிருக்கும். வலப்பக்கம் திறந்திருக்கும். குழலில் மொத்தமாக 9 துளைகள் உண்டு. வாய் வைத்து ஊதப்படும் முதல் துளைக்கு முத்திரை அல்லது முத்திரைத்துளை என்று பெயர். இத்துளை, மற்ற எட்டு துளைகள் ஒவ்வொன்றுக்கும் நடுவில் உள்ள இடைவெளியை விட சற்றுத் தள்ளி இருக்கும்.

வாசிக்கும் முறை

குழலின் 7 துளைகள் மீது 7 விரல்களை வைத்து வாசிக்க வேண்டும். 8 வது கடைசித்துளை பாவிப்பது இல்லை. இடது கை விரல்களில் கட்டை விரலையும், சிறு விரலையும்நீக்கி எஞ்சியுள்ள 3 விரல்களையும், வலது கை விரல்களில் கட்டை விரலைத்தவிர மற்ற 4 விரல்களையும் 7 துளைகளின் மீது வைத்து, முத்திரத் துளைக்குள் வாயின் வழியாகக் காற்றைச் செலுத்தி, துளைகளை மூடித் திறக்கும்போது இசை பிறக்கின்றது.

புல்லாங்குழலின் நீளம், உள்கூட்டின் அளவு கூடும் போது சுருதி குறையும். புல்லாங்குழலில் 7 சுரங்களுக்கு 7 துளைகள் இருந்தாலும் வாசிப்பவரின் மூச்சின் அளவைக் கொண்டே நுட்ப சுரங்களை சரியாக ஒலிக்க முடியும்.

நாதசுவரம்

நாதசுவரம் என்பது துளைக்கருவி வகையைச் சேர்ந்த ஓர் இசைக்கருவியாகும். இது நாதசுவரம், நாதசுரம், நாகசுரம், நாகஸ்வரம். நாயனம் என்று பலவாறு அழைக்கப்படுவது உண்டு. சிறப்பாகத் தென்னிந்தியா, இலங்கை போன்ற இடங்களிலும், தென்னிந்திய இனத்தவர் வாழும் உலகின் பிற பகுதிகளிலும் இந்த இசைக்கருவி வழக்கில் உள்ளது. திறந்த இடத்தில் இசைப்பதற்கு ஏற்றது. வெகு தூரத்தில் இருந்து கேட்டாலும் இன்பத்தைத் தரும் இயல்பினைக் கொண்டது.

தென்னிந்தியாவில் இது ஒரு மங்கலமான இசைக்கருவியாகக் கருதப்படுவதனால், பொதுவாக எல்லாவகையான நன் நிகழ்வுகளிலும் இதற்கு ஒரு இடம் உண்டு. வசதியான பெரிய கோயில்களில் அன்றாடம் இது பல தடவைகள் இசைக்கப்படுவது வழக்கம். ஏனையவற்றில் சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகளின் போது பயன்படுகின்றது. தவிரவும், தனிப்பட்டவர்களின் திருமணம், பூப்புனித நீராட்டுப் போன்ற நிகழ்ச்சிகளிலும், சமய சார்பற்ற பல பொது நிகழ்வுகளிலும் நாகசுவரம் சிறப்பிடம் பெறுகின்றது.

இவ்வாத்தியம் முன்பு தென்னிந்தியாவிலுள்ள நாகூர், நாகபட்டிணம் முதலிய ஊர்களில் உள்ளவர்களான, நாகசர்பத்தைத் தெய்வமாகப் பூசித்த நாகர் என்ற சாதியரினால் வாசிக்கப்பட்டு வந்தது. நாகத்தின் போன்று உருவத்தைப் போன்று நீண்டிருந்ததின் காரணமாகவும் நாதசுவரம் என்னும் ஏற்பட்டது. இதனுடைய இனிமையான நாதம் காரணமாக பிற்காலத்தில் இது நாதஸ்வரம் எனப்பட்டது.

தோற்றம்

நாதசுவரம் ஒரு பண்டைத் தமிழ் இசைக்கருவியாகத் தெரியவில்லை. சங்ககாலத் தமிழ் இலக்கியங்களோ அல்லது இடைக்கால இலக்கியங்களோ இந்த இசைக்கருவி தொடர்பான தகவல் எதையும் தரவில்லை. சிலப்பதிகாரத்தில் கூறப்படும் வங்கியம் என்னும் இசைக்கருவியுடன் இதனைத் தொடர்புபடுத்தச் சிலர் முயன்ற போதிலும் அது புல்லாங்குழல் போன்ற ஒரு கருவியே என்று பலர் கருதுகிறார்கள். இசைக் கலைஞர்கள் பற்றிக் குறிப்பிடுகின்ற கல்வெட்டுக்களிலும் இது பற்றிய குறிப்புக்களோ அல்லது அதனோடு தொடர்புடைய இசைக் கலைஞர் பற்றிய குறிப்புக்களோ இதுவரை கிடைக்கவில்லை. அத்துடன் இதன் துணை இசைக்கருவியாக விளங்குகின்ற தவிலும் கூட இத் தகவல் மூலங்கள் எதிலும் காணக் கிடைக்கவில்லை.

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாதசங்கிரகம் என்னும் இசை நூல் துளைக் கருவிகள் பற்றிக் கூறுகின்ற போது இக் கருவியையும் நாகசுரம் என்ற பெயரில் பட்டியல் இடுகின்றது. இதுவே தற்போதைய நிலையில், கிடைக்கின்ற முதல் வரலாற்றுக் குறிப்பு எனலாம்.

வகைகள்

நாதசுவரத்தில் இரண்டு வகைகள் உண்டு: திமிரி, பாரி. திமிரி நாதசுவரம் உயரம் குறைவாகவும், ஆதார சுருதி அதிகமாகவும் இருக்கும். பாரி நாதசுவரம் உயரம் அதிகமாகவும், ஆதார சுருதி குறைவாகவும் இருக்கும்.


முகவீணை

முகவீணை அல்லது கட்டைக்குழல் என்பது ஒரு துளைக் கருவி வகை தமிழர் இசைக் கருவி ஆகும். நாதசுவரம் போன்று ஆனால் அதை விட குட்டையானது. பரவலாக அறியப்பட்ட நாதசுவரத்தின் ஆதிவடிவம். தூத்துக்குடி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில், இக்கலை மிகச் சிலரால் நிகழ்த்தப்படுகிறது. அருந்ததியர் சாதியினர் மட்டுமே இக்கலையை நிகழ்த்துகின்றனர்.

கட்டைக்குழல், தவில், பம்பை, உறுமி ஆகிய இசைக்கருவிகள், இக்கலையில் பயன்படுத்தப்படுகின்றன. இக்கருவியில் ஓசையிடுவதற்கு, ஏதுவாக ஏழு துளைகள் காணப்படும். இக்குழலின் ஓசை, நாயனத்தின் ஓசையைவிட, உச்ச நிலை அதிர்வைக் கொண்டது. திரைப்பட இசையினையே இக்கலைஞர்கள் பெரிதும் இசைக்கின்றனர்.

கோயில்களிலும், ஆட்டங்களிலும், கூத்துக்களிலும் இக்கருவி பயன்பட்டு வந்திருக்கிறது. இக்கலையின் நிலை, தற்போது மதிப்பிழந்து காணப்படுகிறது.

தாள வாத்தியங்கள்

தவில்

தவில் என்பது நாதஸ்வரத்திற்குத் துணையாக வாசிக்கப்படும் தாள இசைக்கருவியாகும். கருநாடக இசைக்கும் கிராமிய இசைக்கும் இது பயன்படுத்தப்படுகிறது. இது தோம்பு உருவத்தில் மரத்தால் செய்யப்பட்டிருக்கும். விழாக்காலங்களிலும் திருமணம், குழந்தைக்குக் காது குத்தல் போன்ற நன்நிகழ்ச்சிகளிலும் இதன் பயன்பாடு அதிகம். விலங்கின் தோலால் இழுக்கப்பட்டு வளையத்தைக் கொண்டு ஓட்டில் கட்டப்படிருக்கும் இந்தக் கருவியில், ஒரு பக்கம் மறு பக்கத்தைவிடச் சற்று பெரியதாக இருக்கும். தவில் வாசிப்பவர் ஒரு தோல் கயிற்றால் தனது தோளின் மீது தவில் கருவியை மாட்டி முழக்குவார். சிறிய பக்கத்தில் 'Portia' மரத்தால் செய்யப்பட்ட குச்சியினாலும் பெரிய பக்கத்தை விரல்களாலும் முழக்குவர். விரல்களில் கவசங்கள் அணிந்திருப்பார்கள். பெரும்பாலான தவில் கலைஞர்கள் சிறிய பக்கத்தை வலது கையால் குச்சி கொண்டும் பெரிய பக்கத்தை இடது கையால் கவசம் அணிந்த விரல்களைக் கொண்டும் முழக்குவர். எனினும், இடது கையால் குச்சியையும் வலது கையால் விரல்களையும் பயன்படுத்தும் கலைஞர்களும் இருக்கிறார்கள்.

தவில் இசை

தவில் வாசிப்பதற்கு அடிப்படை இசையாவன:

1. த தி தொம் நம் ஜம்

2. த தி தொம் நம் கி ட ஜம்

வரலாறு

தவில் வாத்தியம் எப்போது உருவானது, எப்போது பாவனைக்கு வந்தது என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. ஆனால் 15-ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில் 12 இடங்களில் தவில் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் புராணங்கள், இதிகாசங்களில் டின்டிமம் என்னும் ஒரு தாள வாத்தியம் பற்றி கூறப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் குச்சியாலும் மறுபக்கம் கையாலும் முழக்கப்படும் பறை என குறிப்பிடப்பட்டுள்ளதாக தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூல்நிலையத்தில் உள்ள நூல்களில் எழுதப்பட்டுள்ளது.


மிருதங்கம்

மிருதங்கம் அல்லது தண்ணுமை என்பது தென்னிந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு தாள வாத்தியமாகும். மிகப்பெரும்பாலான கருநாடக இசை நிகழ்ச்சிகளில், சிறப்பாக வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகளில், மிருதங்கம் முக்கியமாக இடம்பெறும். மிருதங்கம் தொன்மையான வரலாற்றைக் கொண்ட ஒரு இசைக்கருவி எனக் கருதப்படுகிறது. இதையொத்த இசைக்கருவி சிந்துவெளி நாகரீக காலத்திலும் புழக்கத்திலிருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. 'மதங்கம்' என்னும் பழந்தமிழ்ச் சொல்லின் திரிபே 'மிருதங்கம்' என்னும் வடமொழிச் சொல் எனக் கருதுகிறார்கள். தமிழின் 'மெது' என்பதே 'மிருது' எனத் திரிந்தது.

பெரும்பாலும் பலாமரக் குற்றியைக் குடைந்து இக்கருவி செய்யப்படுகிறது. இது, இதன் வட்டவடிவ முனைகளில், ஒருமுனை, மற்றமுனையிலும் சற்றுப் பெரிதாகவும் நடுப்பாகம் இவ்விரு முனைகளின் அளவிலும் சற்றுப் பெரிய விட்டமுள்ளதாகவும் அமைந்த ஒரு பொள் உருளை வடிவினதாக அமைந்துள்ளது. திறந்த இரண்டு முனைகளும் தோலினால் மூடப்பட்டிருக்கின்றன. இத் தோற்பகுதிகள் இரண்டும் தோலினாற் செய்த வார்களினால் ஒன்றுடனொன்று இழுத்துப் பிணைக்கப்பட்டுள்ளன. வலது பக்கத்தோலில் "சோறு" என்று அழைக்கப்படும் ஒரு கரு நிறப் பதார்த்தம் நிரந்தரமாக ஒட்டப்பட்டிருக்கும். மறுபக்கத்தில் வாத்தியத்தை வாசிப்பதற்குச் சற்று முன்னர், மாவும் நீரும் கலந்த ஒரு கலவை தடவப்படும். நிகழ்ச்சி முடிவடைந்ததும் இது நீக்கப்படும். மிருதங்கம் இருந்த நிலையிலேயே வாசிக்கப்படுவது வழக்கம்.

அமைப்பு

'மிருத்+அங்கம்' என்று பகுபடும் வடமொழிச் சொல்லுக்கு 'மண்ணை அங்கமாகக் கொண்டது' என்பது பொருள் என்ற போதிலும், இன்றைய மிருதங்கங்கள் மரத்தால் ஆனவை. முதிர்ந்த பலா மரத்தைக் கடைந்து செய்யப்படும் இந்த வாத்தியத்தின், நடுப்பகுதி பெருத்தும், வாசிக்கும் இரு பக்கங்களில் நடுப் படுதியை விட சிறியதாகவும் அமைந்திருக்கும். தோலால் மூடப்பட்ட இரு பக்கங்களையும், தோல்வார் இணைத்திருக்கும். வலப்பக்கத்தை வலந்தலை என்றும், இடப்பக்கத்தை இடந்தலை அல்லது தொப்பி என்றும் கூறுவர்.

வலந்தலையின் நடுவே கரணை இடப்பட்டிருக்கும். கிட்டான் என்ற ஒரு வகைக் கல்லைப் பொடியாக்கி, அதை அரிசிச் சோற்றுடன் கலப்பதன் மூலம் கிடைக்கும் கலவைக்கு சிட்டம் என்று பெயர். இந்தச் சிட்டம் அடுக்கடுக்காய் வட்டமாக வலந்தலையின் மத்தியில் இடப்படும். இதற்குக் கரணை அல்லது சோறு என்று பெயர். இந்தக் கரணையினாலேயே மிருதங்கம் ஸ்ருதி வாத்யம் ஆகிறது. அதாவது பாடகரின் ஸ்ருதியிலேயே மிருதங்கத்தின் ஸ்ருதியையும் கூட்டிக் கொள்ளும் வசதி உண்டு. தவில், கஞ்சிரா போன்ற வாத்தியங்களும் கேட்பதற்கு இனிமையாக இருப்பினும், அவற்றை பாடகர் அல்லது வீணை, குழல் முதலான வாத்தியத்தின் ஸ்ருதியோடு சேர்த்துக் கொள்ள முடியாது.

கடம் போன்ற வாத்யங்களுக்கும் ஸ்ருதி உண்டென்ற போதும், மிருதங்கத்தில் மட்டுமே பல்வேறு சொற்களை வாசிக்க முடியும். இந்தக் காரணங்களாலேயே மிருதங்கத்தை ராஜ வாத்தியம் என்றும் அழைப்பதுண்டு.

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் , மராட்டியர் ஆட்சியில் 'மிருதங்கம்' தமிழகத்துக்குள் நுழைந்தது என்பது இசை ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்து.அது வரை பஜனை, ஹரிகதை, மராட்டிய நடனங்கள் ஆகியவற்றில் வாசிக்கப்பட்டு வந்து மிருதங்கம், தஞ்சை வந்தபின் தமிழ்நாட்டின் சங்கீதம், சதிர் முதலியவற்றிலும் இடம் பெற்றது. காலப்போக்கில், தமிழ்நாட்டில் வேரூன்றியிருந்த லய வடிவங்களும் மிருதங்க வாசிப்பின் மேல் தாக்கத்தை ஏற்படுத்தின.


கஞ்சிரா

கஞ்சிரா (Kanjira) சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். இவ்வாத்தியம் பஜனைகளிலும், கிராமிய மக்களாலும் பயன்படுத்தப்படுகிறது தாடப்பலகை, கனகதப்பட்டை, டேப் தாஸ்ரிதப்பட்டை முதலியனவும் கஞ்சிரா வகையில் சேரும்.

டேப் எனும் வாத்தியக் கருவி கஞ்சிராவுக்கு முன்னோடியாக இருந்தது. அது கஞ்சிராவைவிட அளவில் பெரியதாக இருக்கும். கிராமிய இசையில் பயன்பட்ட இக்கருவியை தற்போதைய கஞ்சிரா உருவத்தில் செய்து கருநாடக இசைக் கச்சேரிகளில் உப தாள வாத்தியமாக வாசித்துப் பெருமை பெற்றவர் மாமுண்டியா பிள்ளை ஆவார்.

கஞ்சிரா உடும்புத் தோலினால் செய்யப்படும் இசைக் கருவியாகும். வனவிலங்குகள் அழிக்கப்படுவதைத் தடுக்கும் முகமாக இவ்வகையான இசைக்கருவிகளின் விற்பனை தமிழ்நாட்டில் பொதுவாகத் தடை செய்யப்பட்டுள்ளது.


கடம்

கடம் கருநாடக இசையுடன் தொடர்புடைய தென்னிந்தியத் தாள வாத்தியக் கருவிகளில் ஒன்றாகும். இது மிக எளிமையான ஓர் இசைக்கருவி ஆகும். இது ஒரு பெரிய மண் பானையில் தட்டுவதன் மூலம் ஒலி எழுப்பப்படும் இசைக்கருவியாகும். கட இசைக்கலைஞர்கள் அமர்ந்த நிலையில் கடத்தின் வாயைத் தன் வயிற்றோடு ஒட்டவைத்துக்கொண்டு இரண்டு கைகளாலும் அடித்து வாசிப்பார். சில வித்துவான்கள் கடத்தைத் தூக்கிப் போட்டு அது கீழே வரும்போது தாளத்திற்கேற்ப ஒலி எழுப்பி இரசிகர்களை பிரமிக்க வைப்பார்கள்.

கர்நாடக இசைக் கச்சேரிகளைப் பொறுத்தவரை, மிருதங்கத்தைப்போல இன்றியமையாத ஓர் இசைக்கருவியாக இல்லாவிட்டாலும், பல இசை நிகழ்ச்சிகளில் கடம் பயன்படுத்தப்படுகின்றது. வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சிகளுக்கு இடையிலும், தனி நிகழ்ச்சிகளாகவும் நடைபெறும். மிருதங்கம், கடம், கஞ்சிரா, தவில் போன்ற கருவிகள் சேர்ந்த தாளவாத்தியக் கச்சேரிகளில், கடத்தின் பங்கு ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்படுவதாகும்.

கடம் தயாரிப்பு

தமிழ் நாடு, சிவகங்கை மாவட்டத்திலுள்ள மானாமதுரை மட்பாண்ட தயாரிப்புகளுக்குப் பிரசித்தி பெற்ற இடமாகும். இங்கு தயாரிக்கப்படும் கடத்துக்கு தனிச் சிறப்பு உண்டு. மானாமதுரையில் பரம்பரையாக கடம் செய்யும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மீனாட்சி அம்மாள் என்ற பெண்ணுக்கு 2013 ஆம் ஆண்டு இந்திய மத்திய அரசின் சங்கீத நாடக அகாதமி விருது வழங்கி கௌரவித்துள்ளது.


மோர்சிங்

மோர்சிங் (யூத யாழ்) இவ்வுலகின் தொன்மையான இசைக்கருவிகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. ஒரு இசைக்கலைஞன் இக்கருவியை வாசிப்பதை கி.மு 4ம் நூற்றாண்டு சீன ஓவியத்தில் காணலாம். இக்கருவியின் மற்ற பெயர்களில் யூத மதப்பெயர் இருந்தாலும், இக்கருவிக்கும் யூத மதத்திற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. தமிழ்நாட்டில் கர்னாடக இசையில் மோர்சிங் முக்கிய பங்கு வகிக்கின்றது.


ஜலதரங்கம்

ஜலதரங்கம் என்பது ஒரு இந்திய தாள இசைக்கருவி ஆகும். நீரால் நிரப்பப்பட்ட பீங்கான் கிண்ணங்கள் இசைக்கலைஞரை சுற்றி வைக்கப்பட்டிருக்கும். இக்கிண்ணங்களின் விளிம்புகளை தனது கைகளிலுள்ள குச்சிகளால் தட்டி அக்கலைஞர் ஒலி எழுப்புவார். நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை என இந்த இசைக்கருவி தமிழில் அழைக்கப்படுகிறது. ஒரு கிண்ணத்தில் சிறி தளவு நீரைவிட்டு, அதன் விளிம்பில் ஒரு கரண்டியால் தட்டுங்கள். 'டங்' என்று இனிய ஒலி பிறக்கிறதல்லவா? இனி, அந்தக் கிண்ணத்தில் மேலும் சிறிது நீரை ஊற்றிய பின் நட்டுங்கள். மீண்டும் ஒலி எழும்பும்; ஆனால் ஒலியில் சிறிது வேறுபாடு இருக்கும். முதல் ஒலியின் சுரமும், இரண்டாவது ஒலியின் சுரமும் வெவ்வேறாக இருக்கும். ஒரு கிண்ணத்தைத் தட்டினால் எழும்பும் ஒலி, அதிலிருக்கும் நீரின் அளவைப் பொறுத்து வேறுபடும். இவ்வாறு பலவேறு சுரங்களை ஒலிக்கும் வகையில் நீர் உள்ள பல கிண்ணங்களை வைத்துக் கொண்டு ஒரு பாடலையே இசைக்கலாம்! அதுதான் ஜலதரங்கம். ஜலதரங்கத்திற்கு "உதக வாத்தியம்' என்னும் பெயரும் உண்டு. அறுபத்து நான்கு கலைகளில் ஜலதரங்கம் வாசிப்பதும் ஒன்றாகும். ஜலதரங்கம் வயலின், மிருதங்கம் ஆகிய இசைக் கருவிகளைத் துணைக்கருவிகளாகக் கொண்டு ஜலதரங்க இசைக் கச்சேரிகள் நடைபெறுகின்றன. இதில் எழும் ஒலி மிக இனிமையாக இருக்கும். பண்டைக்காலத்தில் ஜலதரங்கத்திற்கு வெண்கலக் கிண்ணங்களைப் பயன்படுத் தினர். இன்று பீங்கான் கோப்பைகளைப் பயன்படுத்துகிறார்கள். இதை வாசிப்பவர், வேவ்வேறு சுரங்களை உண்டாக்கும் பீங்கான் கோப்பைகளைத் தம் முன்னால் அரைவட்டமாக வைத்துக் கொள்வார். இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாகக் கோப்பைகளின் சுருதி உயர்ந்துகொண்டே போகும். இவ்வாறு 16 கோப்பைகள் இருக்கும். குறிப்பிட்ட இராகத்திற்கு வேண்டியவாறு கோப்பைகளின் சுருதியைக் கூட்டுவார்கள். அதில் வராத சுரங்களுக்கும் கோப்பைகளைச் சுருதி சேர்த்து, அவற்றை அரைவட்டத்திற்கு வெளியே அந்தந்தக் கிண்ணத்திற்கு அருகில் வைப்பார்கள். வாசிக்கும் இராகத்திற்கு ஏற்ப, வேண்டிய கோப்பைகளை வெளிப்புறத்தி லிருந்து உட்புறம் அரைவட்டத்தில் வைத்து, வேண்டாத கோப்பைகளை வெளியே நகர்த்தி விடுவார்கள். இவ்வாறு செய்வதால் விரைவில் வெவ்வேறு இராகங்களில் பாடல்களை வாசிக்க முடிகின்றது. கோப்பையிலுள்ள நீர் பல வழிகளில் பயன்படுகிறது. சீராக சுருதி சேர்த்துக் கொள்வதற்கும், இனிய நாதத்தை உண் டாக்குவதற்கும் இது உதவுகிறது. நீர்மட்டத் தின் மேல் இலேசாகத் தட்டினால் இசைக்கு வேண்டிய கமகங்கள் உண்டாகும். மிக வேகமாகக் கோப்பைகளைத் தட்டி வாசிக்கும்போது, அவை புரண்டுவிடாமல் இருக்கவும் அவற்றிலுள்ள நீர் உதவுகிறது.


உடுக்கை

உடுக்கை என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். கிராமப்புற கோயில்களிலும் முக்கியமாக மாரியம்மன் கோவில் சமயச் சடங்குகளிலும் இது ஒலிக்கப்படும். தோல் இசைக்கருவியான இதைக் கைகளைக் கொண்டு இசைக்கலாம். உலோகத்தால் அல்லது மரத்தால் செய்யப்பட்ட இரு பக்கங்களும் விரிந்து இடை சிறுத்துப் பருத்திருப்பதால் இதை இடை சுருங்கு பறை என்றும் துடி என்றும் அழைப்பர். கரகம் ஆடும் போதும், பஜனைகளின் போதும், பூசாரியை உருவேற்றுவதற்காகவும் இது முழக்கப்படுவதுண்டு.

உடுக்கைப்பாட்டு

உடுக்கைப்பாட்டு என்பது, உடுக்கை என்னும் இசைக்கருவியை, இசைத்துப் பாடப்படும் கலை ஆகும். இது இசைக்கருவியால், பெயர் பெற்ற கலையாகும்.[1] உடுக்கைப்பாட்டிற்குரிய கதைப்பாடல்களாக, அண்ணன்மார் சாமி கதை, காத்தவராயன் கதை, மதுரை வீரன் கதை ஆகியன உள்ளன. பெரும்பாலும் வண்ணார், நாவிதர் சாதியைச் சேர்ந்த கலைஞர்கள், இக்கலையை நிகழ்த்துகின்றனர். இக்கலை கோயம்புத்தூர், ஈரோடு, உடுமலைப்பேட்டை, பழனி, திருச்சி முதலிய பகுதிகளிலும், கோவில்களிலும், பிற இடங்களிலும் நிகழ்த்தப்படுகிறது.


ஜன்னிய இராகங்களின் பட்டியல்

அ - ஔ

இராகம் மேளகர்த்தா
அசாவேரி தோடி
அடாணா தீரசங்கராபரணம்
அமிர்தலகிரி சுவர்ணாங்கி
அமிர்தவர்ஷிணி மேசகல்யாணி
அமிர்தவாஹினி நடபைரவி
அமிர்த தன்யாசி தோடி
அமுதசுரபி வகுலாபரணம்
அம்சாநந்தினி அடகாம்பரி
அம்பாமனோகரி சுவர்ணாங்கி
அம்போதம் சுபபந்துவராளி
அம்போஜினி ஹரிகாம்போஜி
அர்த்திரதேசி மாயாமாளவகௌளை
அரிதர்ப்பா சூரியகாந்தம்
அலங்காரப்பிரியா நாடகப்பிரியா
ஆகிரிபைரவி சூரியகாந்தம்
ஆந்தோளிகா கரகரப்பிரியா
ஆபேரி கரகரப்பிரியா
ஆபோகி கரகரப்பிரியா
ஆரபி தீரசங்கராபரணம்
ஆனந்தபைரவி நடபைரவி
ஆன்தாளி ஹரிகாம்போஜி
ஆஹிரி வகுலாபரணம்
இந்திரப்பிரியா கனகாங்கி
இந்துகந்தர்வ நடபைரவி
இந்தோளதேசிகம் நாடகப்பிரியா
இந்தோளம் நடபைரவி
இந்தோளவசந்தா நடபைரவி
இராசராசேசுவரி நடபைரவி
இராசாளி வனசுபதி
இனகரப்பிரியா கரகரப்பிரியா
உகப்பிரியா கோகிலப்பிரியா
உகவாணி கீரவாணி
உசாவலி மாயாமாளவகௌளை
உதயரவி சுவர்ணாங்கி
உதயரவிச்சந்திரிகா கரகரப்பிரியா
உதயராகம் நடபைரவி
உத்தரி வாசஸ்பதி
உமாபரணம் ஹரிகாம்போஜி
உழைமாருதம் ஹரிகாம்போஜி
உஷாகல்யாணி கமனாச்ரம
ஊர்மிகி சிம்மேந்திரமத்திமம்
எச்சாசி காயகப்பிரியா
ஏகச்சாரி மாயாமாளவகௌளை
ஏமாங்கி கனகாங்கி
ஐராவதி வாசஸ்பதி
ஓசடீசப்பிரியா கனகாங்கி
ஓம்காரகோஷிணி நாமநாராயணி
ஓம்காரி கரகரப்பிரியா
ஔசதீசப்பிரியா கனகாங்கி
ஔர்வசிரேயப்பிரியா கனகாங்கி

க - கௌ

இராகம் மேளகர்த்தா
கணசிந்து மாயாமாளவகௌளை
கணசியாமளா மானவதி
கணமுகாரி ரத்தினாங்கி
கணிகா நடபைரவி
கந்தா அனுமத்தோடி
கர்நாடக சாரங்கா மாயாமாளவகௌளை
கர்நாடக சுத்தசாவேரி கனகாங்கி
கல்கட காயகப்பிரியா
கல்பனதாரிணி காயகப்பிரியா
கல்யாணகேசரி மாயாமாளவகௌளை
கல்லோல அடகாம்பரி
கலாகாந்தி காயகப்பிரியா
கலாசாவேரி அனுமத்தோடி
கலாவதி சக்கரவாகம்
கலிங்கட மாயாமாளவகௌளை
கலிந்தசா வகுலாபரணம்
கன்னடபங்காளம் மாயாமாளவகௌளை
கனகசாவேரி அனுமத்தோடி
கனகத்திரி நாடகப்பிரியா
கனகத்தோடி கனகாங்கி
கனகவசந்தம் நடபைரவி
கனகாம்பரி கனகாங்கி
காத்தியாயினி நடபைரவி
கானசாமவராளி கானமூர்த்தி
குகப்பிரியா சக்கரவாகம்
குசுமமாருதம் சூரியகாந்தம்
குஞ்சரி மானவதி
குண்டக்கிரியா மாயாமாளவகௌளை
குணாவதி நாடகப்பிரியா
கும்மகாம்போதி மாயாமாளவகௌளை
குர்சரி மாயாமாளவகௌளை
குவலயாபரணம் வகுலாபரணம்
கெய எச்சாசி காயகப்பிரியா
கோகிலா சக்கரவாகம்
கோகிலாரவம் கோகிலப்பிரியா
கோசினி சக்கரவாகம்
கோபிகவசந்தம் நடபைரவி
கௌமாரி கோகிலப்பிரியா
கௌரி மாயாமாளவகௌளை
கௌளிபந்து மாயாமாளவகௌளை
கௌளை மாயாமாளவகௌளை

ச - சௌ

இராகம் மேளகர்த்தா
சக்கரநாராயணி சக்கரவாகம்
சகன்மோகினி மாயாமாளவகௌளை
சங்காரபிரமரி சங்காரத்துவனி
சத்தியாவதி மாயாமாளவகௌளை
சந்திரசூடா மாயாமாளவகௌளை
சந்திரிகதோடி அனுமத்தோடி
சபகந்தர்வ நடபைரவி
சயசம்வர்த்தனி சூரியகாந்தம்
சயசுத்தமாளவி அடகாம்பரி
சயந்தசிறீ நடபைரவி
சர்வசிறீ கனகாங்கி
சரதப்பிரியா நடபைரவி
சல்மிகா சங்காரத்துவனி
சல்லப வகுலாபரணம்
சலங்கநாட்டை மாயாமாளவகௌளை
சனதோடி அனுமத்தோடி
சாந்தபாசினி நாடகப்பிரியா
சாயகௌளை மாயாமாளவகௌளை
சாயாவதி சூரியகாந்தம்
சாரங்ககாப்பி நடபைரவி
சாரமதி நடபைரவி
சாருவர்த்தனி மாயாமாளவகௌளை
சாமந்ததீபர மாயாமாளவகௌளை
சாமகன்னடா சூரியகாந்தம்
சாமவராளி கானமூர்த்தி
சாரங்கநாட்டை மாயாமாளவகௌளை
சாவேரி மாயாமாளவகௌளை
சிங்கள நடபைரவி
சித்தகர்சனி சேனாவதி
சித்திரமணி கோகிலப்பிரியா
சிந்துகௌரி சேனாவதி
சிந்துதன்யாசி நடபைரவி
சிந்துபைரவி நாடகப்பிரியா
சிந்துராமக்கிரியா மாயாமாளவகௌளை
சிம்கல அடகாம்பரி
சியாமளகல்யாணி ரூபவதி
சியாமளி சக்கரவாகம்
சிரவணமாலிகா அனுமத்தோடி
சிவசக்தி நாடகப்பிரியா
சிறீ நபோமார்கினி சக்கரவாகம்
சிறீநவரசசந்திரிகா நடபைரவி
சிறீமணி ரத்தினாங்கி
சிறீமதி ரத்தினாங்கி
சீவந்திகா சூரியகாந்தம்
சுகுமாரி நடபைரவி
சுசுமா நடபைரவி
சுத்த காம்போதி வகுலாபரணம்
சுத்த கௌளை சூரியகாந்தம்
சுத்த சாளவி நடபைரவி
சுத்த சீமந்தினி அனுமத்தோடி
சுத்ததேசி நடபைரவி
சுத்த தோடி அனுமத்தோடி
சுத்த முகாரி கனகாங்கி
சுத்த லலிதா கோகிலப்பிரியா
சுத்ரதாரி நடபைரவி
சுபாசினி சக்கரவாகம்
சுத்ததீபம் சூரியகாந்தம்
சுரசிந்து மாயாமாளவகௌளை
சுவர்ணமாலி அனுமத்தோடி
சேனாகிரணி சேனாவதி
சோமா வகுலாபரணம்
சோன்புரி நடபைரவி
சௌசன்யா அனுமத்தோடி
சௌராட்டிரம் சூரியகாந்தம்

ஞ - ஞௌ

இராகம் மேளகர்த்தா
ஞானசிந்தாமணி கோகிலப்பிரியா

த - தௌ

இராகம் மேளகர்த்தா
தக்க மாயாமாளவகௌளை
ததில்லதிகம் கனகாங்கி
தர்க்சிகா நடபைரவி
தர்பாரி கானடா நடபைரவி
தர்மப்பிரகாசினி நடபைரவி
தன்யாசி அனுமத்தோடி
தனசிறீ நடபைரவி
தாரககௌளை மாயாமாளவகௌளை
தானரூபி மானவதி
தானுகீர்த்தி மானவதி
திலிபிகவசந்தா நடபைரவி
திவ்யகாந்தாரி நடபைரவி
திவ்யமாலதி அனுமத்தோடி
தீபரமு நாடகப்பிரியா
தீபிகவசந்தா நடபைரவி
துனிபின்னசட்சம் தேனுகா
தேசிகதோடி அனுமத்தோடி
தேசியகௌளை மாயாமாளவகௌளை
தேவக்கிரியா நடபைரவி
தேவரஞ்சி மாயாமாளவகௌளை
தோயவேகவாகினி சக்கரவாகம்

ந - நௌ

இராகம் மேளகர்த்தா
நடபரணம் நாடகப்பிரியா
நவரசமாலா சேனாவதி
நவரத்தினவிலாசம் நடபைரவி
நாககாந்தாரி நடபைரவி
நாகசூடாமணி சூரியகாந்தம்
நாகவராளி அனுமத்தோடி
நாட்டியதாரணா நாடகப்பிரியா
நாதநாமக்கிரியா மாயாமாளவகௌளை
நாதரஞ்சனி கானமூர்த்தி
நாரீரீதிகௌளை நடபைரவி
நிரஞ்சனா நாடகப்பிரியா
நீலமதி நடபைரவி
நீலவேணி நடபைரவி

ப - பௌ

இராகம் மேளகர்த்தா
பத்திரதோடி அனுமத்தோடி
பரசு மாயாமாளவகௌளை
பாக்கியசபரி நாடகப்பிரியா
பக்தப்பிரியா சக்கரவாகம்
பாடி மாயாமாளவகௌளை
பாரதி சங்காரத்துவனி
பாவினி மாயாமாளவகௌளை
பானுச்சந்திரிகா அனுமத்தோடி
பிந்துமாலினி சக்கரவாகம்
பிபாசு மாயாமாளவகௌளை
பிரதாபதன்யாசி மாயாமாளவகௌளை
பிரதாபரஞ்சனி மாயாமாளவகௌளை
பிரபுப்பிரியா அனுமத்தோடி
பிரவிருத்தி சக்கரவாகம்
பிலஸ்கனிதோடி அனுமத்தோடி
பின்னஷட்ஜமம் தேனுகா
பின்னபஞ்சமம் தேனுகா
புயாங்கினி சக்கரவாகம்
புவனகாந்தாரி நடபைரவி
புறநீர்மை மாயாமாளவகௌளை
புன்னாகத்தோடி அனுமத்தோடி
புன்னாகவராளி அனுமத்தோடி
பூபாளம் அனுமத்தோடி
பூர்ணசட்சம் நடபைரவி
பூரணபஞ்சமம் மாயாமாளவகௌளை / சக்கரவாகம்
பூர்ணலலிதா மாயாமாளவகௌளை / சங்காரத்துவனி
பூர்வவராளி கானமூர்த்தி
பூர்வி மாயாமாளவகௌளை
பூர்விகவசந்தா மாயாமாளவகௌளை
பேனத்துதி ரத்தினாங்கி
பைரவி நடபைரவி
போகி சேனாவதி
பைரவம் சூரியகாந்தம்
பௌளி மாயாமாளவகௌளை
பௌளி ராமக்கிரியா மாயாமாளவகௌளை

ம - மௌ

இராகம் மேளகர்த்தா
மகதி நடபைரவி
மங்களகைசிகி மாயாமாளவகௌளை
மருவ மாயாமாளவகௌளை
மல்கோசு நடபைரவி
மல்லிகா வசந்தம் மாயாமாளவகௌளை
மலகரி மாயாமாளவகௌளை
மலயமாருதம் சக்கரவாகம்
மனோரஞ்சனி மானவதி
மனோலயம் மாயாமாளவகௌளை
மாஞ்சி நடபைரவி
மாதங்ககாமினி நாடகப்பிரியா
மார்க்கதேசி மாயாமாளவகௌளை
மாளவகுறிஞ்சி மாயாமாளவகௌளை
மாளவபஞ்சமம் மாயாமாளவகௌளை
முக்தாங்கி சக்கரவாகம்
முகுந்தமாலினி சக்கரவாகம்
மேகரஞ்சனி மாயாமாளவகௌளை
மேகா கனகாங்கி
மேசபௌளி மாயாமாளவகௌளை
மோகனநாட்டை தேனுகா

ய - யௌ

இராகம் மேளகர்த்தா

ர - ரௌ

இராகம் மேளகர்த்தா
ரசிகரஞ்சனி சக்கரவாகம்
ரத்தினவராளி ரத்தினாங்கி
ராகமஞ்சரி சக்கரவாகம்
ராமக்கிரியா மாயாமாளவகௌளை
ராமகலி மாயாமாளவகௌளை
ரிசபவிலாசம் கனகாங்கி
ருக்மாம்பரி மாயாமாளவகௌளை
ரேவகுப்தி மாயாமாளவகௌளை
ரேவதி ரத்தினாங்கி
ரோகிணி சூரியகாந்தம்
ரௌப்பியநாக ரூபவதி

ல - லௌ

இராகம் மேளகர்த்தா
லதாந்தப்பிரியா கனகாங்கி
லலிதபஞ்சமம் மாயாமாளவகௌளை
லலிதபைரவி சங்காரத்துவனி
லலிதா மாயாமாளவகௌளை
லவங்கி கனகாங்கி

வ - வௌ

இராகம் மேளகர்த்தா
வசந்ததோடி தேனுகா
வசந்தநாராயணி கோகிலப்பிரியா
வசந்த பைரவி வகுலாபரணம்
வசந்தமாலி கோகிலப்பிரியா
வசந்தமுகாரி வகுலாபரணம்
வசந்தவராளி நடபைரவி
வர்தனி கோகிலப்பிரியா
வலசி சக்கரவாகம்
வனாவளி வனசுபத��
வாகேஸ்வரி கனகாங்கி
வாடே வசந்தபைரவி வகுலாபரணம்
விட்டலப்பிரியா வனசுபதி
விசயோலாசினி வகுலாபரணம்
விசாரதா மாயாமாளவகௌளை
வீணதாரி சக்கரவாகம்
வேகவாகினி சக்கரவாகம்